புதுடெல்லி: கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர்கள் சேர்கைக்கு புதிய தடை விதித்து அவசர சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
மத்திய கல்வி அமைச்சகத்தின் கேந்திரிய வித்யாலயா, பள்ளிகள் நாடு முழுவதும் செயல்படுகின்றன. ராணுவத்தினர், மத்திய, மாநில அரசின் அலுவலர், ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனத்தினர் ஆகியோரின் பிள்ளைகளுக்கு, முன்னுரிமை அளித்து இந்த கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
மீதமுள்ள இடங்கள் மற்றவர்களுக்கு ஒதுக்கப்படும்.கேந்திர வித்யாலயா பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பம் 21ம் தேதி உடன் நிறைவு பெற்றது. இந்த ஆண்டு முதல் கேந்திரியா வித்யாலயா பள்ளிகளில் 1ம் வகுப்பில் மாணவர்களை சேர்ப்பதற்கான வயது 6 ஆக இருக்க வேண்டுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கல்வி கொள்கை திட்டத்தின் கீழ் இந்த அறிவிப்பு வெளியாகி இருந்து. இதனிடையே எம்.பிக்களுக்கான சிறப்பு ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கைக்கு தடைவிதித்து கேந்திரிய பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
தங்கள் தொகுதிகளில் இருந்து தலா 10 மாணவ இடங்களுக்கு பரிந்துரை செய்யும் நடைமுறை இருந்து வருகிறது. தற்போது எம்.பிக்களுக்கான சிறப்பு ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைக்க திடீர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை எம்.பி.க்களிடையே சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.