திருப்பதியில் 6 கிலோ மீட்டர் வரிசையில் சாமி தரினத்திற்காக பக்தர்கள்.
35 மணி நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
நாளை புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு திருப்பதி மலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. இதனால் இலவச தரிசனத்திற்கு 35 மணி நேரமும், 300 ரூபாய் கட்டண தரிசத்திற்கு நான்கு மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.
எனவே இலவச தரிசனத்திற்காக வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில் உள்ள அனைத்து அறைகளிலும் பக்தர்கள் நிரம்பி அங்கு இடம் கிடைக்காத பக்தர்கள் சுமார் 6 கிலோ மீட்டர் நீள வரிசையில் நின்று கொண்டுள்ளனர்.
நாளை புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை ஆகையால் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு உணவு குடிநீர், டீ, காபி ஆகிய உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் தேவஸ்தான நிர்வாகம் செய்து கொடுத்து வருகிறது.
பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் அறைகள் கிடைக்காமல் பக்தர்கள் அவதிக்க உள்ளாகி வருகின்றனர்.
திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது .
நேற்று ஒரே நாளில் 72 ஆயிரத்து 192 பக்தர்கள் ஏழுமலையானை வழிபட்டு கோவில் உண்டியல் காணிக்கையாக 2 கோடியே 17 லட்சம் ரூபாயை காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…
சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…
ஆக்சன் கிங் சூர்யா? கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது.…
ஆக்சன் அதகளம்… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது. முழுக்க…
This website uses cookies.