கொரோனா தொற்று முதல் சில ஆண்டுகளாக திரையரங்கு வருவாய் குறைந்து வருகிறது என்றும், தயாரிப்புச் செலவுகள் பல மடங்கு உயர்ந்து வருவதால் படப்பிடிப்புகளை நிறுத்த முடிவு செய்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக ஹைதராபாத்தில் பல தயாரிப்பாளர்கள் கூட்டங்களை நடத்தி, தொழில்துறையின் உயிர்வாழ்விற்கான விஷயங்களை சரியாக அமைக்க கடுமையான நடவடிக்கை எடுக்க முடிவு செய்தனர். அதன் காரணமாக ஆகஸ்ட் 1ம் தேதி முதல் படப்பிடிப்பு நிறுத்தப்படும் என தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இது குறித்து தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்று பிறகு வருவாய் சூழ்நிலைகள் மற்றும் அதிகரித்து செலவுகள் காரணமாக அனைத்து பிரச்சனைகளையும் விவாதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
ஆரோக்கியமான சூழலில் எங்கள் திரைப்படங்களை வெளியிடுகிறோம். இது சம்பந்தமாக, கில்டின் அனைத்து தயாரிப்பாளர் உறுப்பினர்களும் தானாக முன்வந்து ஆகஸ்ட் 1, 2022 முதல் படப்பிடிப்புகளை நிறுத்த முடிவு செய்துள்ளோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வசூல் இழப்பைத் தவிர்க்க, திரையரங்குகளில் வெளியான 10 வாரங்களுக்குப் பிறகுதான் OTT தளங்களில் புதிய திரைப்படத்தை வெளியிடுவது என்றும் தயாரிப்பாளர்கள் கூட்டாக முடிவு செய்துள்ளனர்.
அதிக டிக்கெட் விலை காரணமாகவும், கொரோனா பரவல் காரணமாகவும், சினிமா ரசிகர்கள் முன்பு போல் திரைப்படங்களைப் பார்க்க திரையரங்குகளுக்கு வருவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் திரையரங்கு டிக்கெட் விலையை குறைக்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், மல்டிபிளெக்ஸில் ஜிஎஸ்டியை சேர்த்து ரூ.150 முதல் ரூ.120 வரை இருக்கும் வகையில் திட்டங்கள் தயார் செய்யப்பட்டு வருவதாகவும், விரைவில் இதற்கான விவரங்கள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.