எந்த மொழியையும் திணிக்கக்கூடாது, மாநிலங்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி : துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேச்சு!!

சென்னை: எந்த மொழியையையும் திணிக்கக் கூடாது! என்று சென்னையில் நடந்த கருணாநிதி சிலை திறப்புவிழாவில் கலந்து கொண்ட இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்தார்

சென்னை, அண்ணாசாலை, ஓமந்துாரார் அரசினர் தோட்டத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமை தாங்கி துணை ஜனாதிபதியை வரவேற்று பேசினார்.

விழாவில் கலந்து கொண்ட வெங்கையா நாயுடு மேலும் பேசியதாதவது, ‘ கருணாநிதி தமிழகத்தில் நிலையான ஆட்சி வழங்கினார். சிறந்த பேச்சாளராகவும், நிர்வாகியாகவும் விளங்கினார். இந்தியாவின் ஆற்றல் வாய்ந்த தலைவர்களில் கருணாநிதியும் ஒருவர். கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தன் தரப்பு கருத்தினை முன்வைப்பதில் கருணாநிதி தனித் திறன் படைத்தவர்.

நம் தாய்மொழி கண் போன்றது. எனவே நம் தாய்மொழியின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும். எந்த ஒரு மொழியையும் திணிக்கக் கூடாது. எதிர்க்கவும் கூடாது. தமிழ் கலாச்சாரம், இலக்கியம் மொழி வளர்ச்சிக்கு பாடுபட்டவர் கருணாநிதி. மாநிலங்களின் முன்னேற்றம் இல்லாமல் நாடு வளர்ச்சி பெற முடியாது.சிற்பக் கலையில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. கருணாநிதியின் இச்சிலை உயிரோவியமாக விளங்குகிறது. இந்த வாய்ப்பை வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு வெங்கையா நாயுடு பேசினார்

கருணாநிதி சிறந்த நிர்வாகி, சமூக சீர்திருத்தவாதி, எழுத்தாளர், இலக்கியவாதி, கவிஞர், படைப்பாளி பத்திரிக்கையாளர் என பன்முக தன்மை கொண்டவர். திரையுலகமாக இருந்தாலும், அரசியலாக இருந்தாலும் அதில் கோலோச்சியவர் கருணாநிதி. எமெர்ஜென்சி கொண்டு வரப்பட்ட போது அதை முழு மூச்சோடு எதிர்த்தவர்.கருணாநிதி கைது செய்யப்பட்ட நேரத்தில் அப்போதைய பிரதமர் வாஜ்பாயுடன் பேசினேன். உடனடியாக கருணாநிதி இருக்கும் இடம் ஓடி வந்தேன்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இளைஞருக்கு இப்படி ஒரு மரணமா? கொந்தளித்த பொதுமக்கள் : மறியலால் போக்குவரத்து நெரிசல்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…

20 minutes ago

இப்போ வரைக்கும் அந்த பணத்தை திருப்பி கொடுக்கலை- பிரேம்ஜியிடம் ஏமாந்த பிரபல நடிகர் ஓபன் பேட்டி…

மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…

28 minutes ago

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை.. 49 வயது கூலித்தொழிலாளியின் கோரமுகம்!!

கரூர், தென்னிலை அருகே, இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, கூலி தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து…

52 minutes ago

17 வயது சிறுவனுடன் வலுக்கட்டாயமாக உல்லாசம்… போக்சோவில் 32 வயது பெண் கைது!

17 வயது சிறுவனை வற்புறுத்தி உல்லாசமாக இருந்த 32 வயது பெண்ணை போலீசார் கைது செய்தனர். நெல்லை நாங்குநேரி அடுத்த…

1 hour ago

எங்க தாவுறது நானே தவழ்ந்துட்டு இருக்கேன்- “குபேரா” படத்தின் பரிதாபகரமான வசூல் நிலவரம்!

கலவையான விமர்சனம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள…

1 hour ago

நீங்கள் முதலில் Shut Up பண்ணுங்க? DNA படத்தை கலாய்த்த ப்ளூ சட்டை மாறனை ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்!

ரசிகர்கள் வரவேற்பு அதர்வா நடிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நேற்று “குபேரா” படத்துடன் மோதிய திரைப்படம் “DNA”. இதில் அதர்வாவுக்கு…

3 hours ago

This website uses cookies.