2 மின்விளக்குகளும், ஒரு மின் விசிறியும் உள்ள வீட்டிற்கு ரூ.1 லட்சம் மின் கட்டணமாக வந்திருப்பதை கேட்டு மூதாட்டி அதிர்ச்சியடைந்துள்ளார்.
கர்நாடகா மாநிலம் கொப்பள் மாவட்டம் பாக்யா நகரைச் சேர்ந்தவர் கிரிஜாம்மா. இவரது வீட்டில், 2 மின்விளக்குகளும், ஒரு மின் விசிறி மட்டுமே உள்ள நிலையில், அவருக்கு அதிகப்பட்சமாக 200 ரூபாய் வரை மட்டுமே மின் கட்டணம் வந்துகொண்டிருந்தது.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் கிரிஜாம்மாவின் வீட்டில் புதிய டிஜிட்டல் மீட்டர் மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து, அவருக்கு அந்த மாதத்தில், ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 96 ரூபாய் மின் கட்டணம் வந்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த அந்த மூதாட்டி, இது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளுக்கு புகாராக தெரிவித்தார்.
இதனை நேரில் ஆய்வு செய்த அதிகாரிகள், புதிய டிஜிட்டல் மீட்டரின் ஏதேனும் கோளாறாக இருக்கலாம் எனக் கருதி, வேறு ஒரு டிஜிட்டல் மீட்டரை பொருத்திச் சென்றனர்.
இருப்பினும், ஜூன் மாதம் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 315 ரூபாய் மின் கட்டணம் வந்துள்ளது. மின் கட்டணம் அதிகமாக வருவதால், மின் இணைப்பை துண்டிக்கப்போவதாக மின்வாரிய ஊழியர்கள் எச்சரித்துவிட்டு சென்றுள்ளனர்.
இதன்மூலம், தேர்தலில் காங்கிரஸ் அறிவித்த அறிவித்துள்ள 200 யூனிட் இலவச மின்சார சலுகையை பெறும் தகுதியையும் கிரிஜாம்மா இழந்துள்ளார். இதனால், என்ன நடப்பது என்றே புரியாத கிரிஜாம்மா, வேதனையின் உச்சியில் உள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.