2 மின்விளக்குகளும், ஒரு மின் விசிறியும் உள்ள வீட்டிற்கு ரூ.1 லட்சம் மின் கட்டணமாக வந்திருப்பதை கேட்டு மூதாட்டி அதிர்ச்சியடைந்துள்ளார்.
கர்நாடகா மாநிலம் கொப்பள் மாவட்டம் பாக்யா நகரைச் சேர்ந்தவர் கிரிஜாம்மா. இவரது வீட்டில், 2 மின்விளக்குகளும், ஒரு மின் விசிறி மட்டுமே உள்ள நிலையில், அவருக்கு அதிகப்பட்சமாக 200 ரூபாய் வரை மட்டுமே மின் கட்டணம் வந்துகொண்டிருந்தது.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் கிரிஜாம்மாவின் வீட்டில் புதிய டிஜிட்டல் மீட்டர் மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து, அவருக்கு அந்த மாதத்தில், ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 96 ரூபாய் மின் கட்டணம் வந்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த அந்த மூதாட்டி, இது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளுக்கு புகாராக தெரிவித்தார்.
இதனை நேரில் ஆய்வு செய்த அதிகாரிகள், புதிய டிஜிட்டல் மீட்டரின் ஏதேனும் கோளாறாக இருக்கலாம் எனக் கருதி, வேறு ஒரு டிஜிட்டல் மீட்டரை பொருத்திச் சென்றனர்.
இருப்பினும், ஜூன் மாதம் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 315 ரூபாய் மின் கட்டணம் வந்துள்ளது. மின் கட்டணம் அதிகமாக வருவதால், மின் இணைப்பை துண்டிக்கப்போவதாக மின்வாரிய ஊழியர்கள் எச்சரித்துவிட்டு சென்றுள்ளனர்.
இதன்மூலம், தேர்தலில் காங்கிரஸ் அறிவித்த அறிவித்துள்ள 200 யூனிட் இலவச மின்சார சலுகையை பெறும் தகுதியையும் கிரிஜாம்மா இழந்துள்ளார். இதனால், என்ன நடப்பது என்றே புரியாத கிரிஜாம்மா, வேதனையின் உச்சியில் உள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.