சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகரின் அறையில் ஆடம்பர பொருட்களும், பணமும் இருந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
இரட்டை இலை சின்னம் பெற்றுத் தவருவதற்காக தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுத்த முயன்றவர் என குற்றம்சாட்டப்பட்டவர் சுகேஷ் சந்திரசேகர். இவர் தொழிலதிபர்களை ஏமாற்றி ரூ.200 கோடிக்கு மேல் பண மோசடி செய்த வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு டெல்லியில் உள்ள மண்டோலா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இதுதொடர்பான வழக்கில் பாலிவுட் நடிகைகள் ஜாக்குலின் பெர்னான்டஸ், நோரா பதேஹி ஆகியோரும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டனர்.
இந்த நிலையில் சிறையில் அவர் சொகுசாக வாழ்வதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது அறையில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அதில், பணம், ஆடம்பர ஆடை, காலணிகள் உள்ளிட்ட பொருட்கள் இருப்பது தெரியவந்தது. ரூ. 1.5 லட்சம் மதிப்பிலான விலை உயர்ந்த செருப்பு மற்றும் ஜீன்ஸ் பேண்ட்கள் இருந்தது கண்டறியப்பட்டது.
ஜெயிலர் தீபக் சர்மா முன் நின்றுகொண்டு சுகேஷ் சந்திரசேகர் அழுவது போன்ற வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது. இதனிடையே, சிறையில் இருந்த பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், விசாரணை மேற்கொண்டனர்.
கலவையான விமர்சனம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த வாரம் மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான “ரெட்ரோ”…
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை மக்கள் மத்தியில் கவர வைத்த பங்கு கோபிநாத், பிரியங்கா, மாகாபாவுக்கு உண்டு. நிகழ்ச்சியை கொண்டு…
இந்தியர்களை அதிரவைத்த சம்பவம் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகளின் தாக்குதல் சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சியில் இருந்து இன்னும் பல…
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள தாண்டிகுடி கிராமத்தில் ஜனநாயக படப்பிடிப்புக்காக தமிழக வெற்றி கழக கட்சி தலைவரும் நடிகருமான விஜய்…
தமிழ்நாடு ட்ரெக்கிங் என்ற திட்டத்தின் கீழ் சுற்றுலா பயணிகள் தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களை சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.…
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
This website uses cookies.