திருப்பதி : அனைவருக்கும் ஏழுமலையான் தரிசன வாய்ப்பு கிடைக்க வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே திருப்பதி மலைக்கு வாருங்கள் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.
திருப்பதி மலையில் இன்று நடைபெற இருக்கும் தன்னுடைய பேத்தியின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு குடும்பத்துடன் திருமலைக்கு வந்திருக்கிறார்.
நேற்று இரவு திருமலைக்கு வந்த அவர் இன்று காலை விஐபி பிரேக் தரிசனம் மூலம் ஏழுமலையானை தரிசித்தார். மிக முக்கிய பிரமுகர்களுக்கான சிறப்பு வரவேற்பு முறையை தவிர்த்து வரிசையில் சென்று ஏழுமலையானை தரிசித்த அவருக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து வேத பண்டிதர்கள் வெங்கையா நாயுடு மற்றும் அவரது குடும்பத்தாருக்கு வேத ஆசி வழங்கினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருப்பதி மலையில் இன்று என்னுடைய பேத்தியின் திருமணம் மிக எளிமையான முறையில் நடைபெற உள்ளது.
அதில் கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் வந்திருக்கிறேன். திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஹிந்து தர்ம பிரச்சாரத்திற்கு முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வருவது வரவேற்கத்தக்கது.
அனைத்து பக்தர்களும் திருப்பதி மலைக்கு வந்து ஏழுமலையானை தரிசிக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். அனைவருக்கும் ஏழுமலையான் தரிசன வாய்ப்பு கிடைக்க வசதியாக திருப்பதி மலைக்கு வருடத்தில் ஒருமுறை மட்டுமே பக்தர்கள் வர வேண்டும். இதன் மூலம் மற்றவர்களுக்கும் ஏழுமலையான் தரிசன வாய்ப்பு கிடைக்கும் என்று அப்போது தெரிவித்தார்.
நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
This website uses cookies.