சாலை சீரமைப்பில் முறைகேடு நடந்த வழக்கில் ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அமராவதி மாஸ்டர் பிளான் மற்றும் இன்னர் ரிங் ரோடு திட்டங்களில் முறைகேடுகள் நடந்திருப்பதாக ஆந்திர மாநில சிஐடியிடம் எம்எல்ஏ அல்லா ராமகிருஷ்ண ரெட்டி கடந்த மாதம் 27ம் தேதி புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், முறைகேடு நடந்திருப்பதற்கான முகாந்திரங்கள் இருப்பதாகக் கூறி, கடந்த 6ம் தேதி சிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அதாவது, முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, லிங்கமனேனி ரமேஷ், லிங்கமானேனி வெங்கட சூர்யா ராஜசேகர், LEPL புராஜெக்ட்ஸ் மற்றும் ராமகிருஷ்ணா ஹவுசிங் பிரைவேட் லிமிடெட் இயக்குநர் அஞ்சனி குமார் ஆகியோர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது எதிர்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளையில், ஆந்திராவில் சுற்றுப்பயணம் செய்து வரும் சந்திரபாபு நாயுடுவுக்கு கிடைத்த வரவேற்பினை பொறுத்துக் கொள்ள முடியாமல், ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி, இதுபோன்று பொய்யான வழக்கை பதிவு செய்திருப்பதாக தெலுங்குதேசக் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.