பரபரப்பான அரசியல் சூழலில் நாளை பட்ஜெட் கூட்டத் தொடர் கூட உள்ள நிலையில், அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரச அழைப்பு விடுத்தள்ளது.
ஆண்டுதோறும் நாடாளுமன்ற கூட்டத் தொடர் குடியரசு தலைவரின் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் என்பதால், குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் நாளை தொடங்குகிறது.
நாளை மறுநாள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார். இதைத் தொடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும். அடுத்த மாதம் 9ம் தேதி வரை இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்கிறது.
பீகாரில் ஆட்சி மாற்றம், நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட உள்ள சூழல்களில், இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் கூடுகிறது. எனவே, பல்வேறு பிரச்சனைகளி கிளப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில், இந்த கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவதற்கு எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பை பெறுவதற்காக நாடாளுமன்றத்தில் இன்று அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.