நாடாளுமன்ற தேர்தல் தேதி குறித்த குழப்பம் ஏற்பட்ட நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
நாடாளுமன்றத்திற்கு இன்னும் ஓரிரு மாதங்களில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான பணிகளில் இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அநேகமாக, அடுத்த மாதம் இறுதி அல்லது மார்ச் மாத தொடக்கத்தில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 9 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிகிறது.
இதனிடையே, நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 16ம் தேதி நடைபெறுவதாகக் கருதி, தேர்தல் சார்ந்த பணிகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த சுற்றறிக்கை வெளியான நிலையில், நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 16ம் தேதி நடைபெற வாய்ப்புள்ளதா..? என்பது குறித்த விவாதம் எழுந்தது.
இதையடுத்து டெல்லி தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் விடுத்துள்ள X தளப் பதிவில் கூறியிருப்பதாவது ;-சுற்றறிக்கையை குறிப்பிட்டு தேர்தல் தொடங்கும் உத்தேச நாள்தானா? என்பதை தெளிவுபடுத்தும்படி சில ஊடக கேள்விகள் வருகின்றன. தலைமை தேர்தல் ஆணையத்தின் தேர்தல் திட்டமிடலின்படி அதிகாரிகள் தங்கள் பணிகளை திட்டமிட்டு செய்து முடிப்பதற்கு மட்டுமே இந்த உத்தேச தேதி குறிப்பிடப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.