தற்போதைய சூழலில் இந்தியாவை உலகமே உற்றுப் பார்ப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமையேற்றுள்ள நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அவர் பேசியதாவது :- குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாள் இன்று. ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்றுள்ள சூழல், தற்போது கூட்டத் தொடர் கூடுகிறது. எனவே, இது முக்கியமானதாகும். இந்தியாவுக்கு இது மிகப்பெரிய வாய்ப்பு. ஜி20 மாநாடு என்பது சாதாரண தூதரக நிகழ்ச்சி கிடையாது. இந்தியாவின் திறமையை உலக அரங்கிற்கு எடுத்துக் காட்டுவதற்கான பெரிய வாய்ப்பு. இந்த மாநாட்டின் மூலம் இந்தியாவை பற்றி உலகமே தெரிந்து கொள்ள செய்வதற்கான அரிய வாய்ப்பாக இது பார்க்கப்படுகிறது.
நாட்டின் வளர்ச்சியை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வதற்கும், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான புதிய வாய்ப்புகளை மனதில் கொண்டும் முக்கியமாக முடிவுகள் எடுக்கவும் இந்தக் கூட்டத் தொடரில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். எனவே, அனைத்து கட்சிகளும் கருத்தொற்றுமையுடன் செயல்பட வேண்டும், எனக் கூறினார்.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.