‘ஜூஸ் குடிச்சது ஒரு குத்தமா’…ஆன்லைன் விசாரணையில் குளிர்பானம் அருந்திய போலீஸ்: நீதிபதி கொடுத்த வேற லெவல் Punishment..!!

ஆமதாபாத்: குஜராத் உயர்நீதிமன்ற ஆன்லைன் விசாரணையின் போது குளிர்பானம் அருந்திய காவலருக்கு, 100 குளிர்பானங்களை பார் அசோசியேஷனுக்கு விநியோகிக்க வேண்டும் என தலைமை நீதிபதி உத்தரவிட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

குஜராத்தில் சாலையில் இரு பெண்களை இன்ஸ்பெக்டர் மற்றும் காவலர்கள் தாக்கியதாக கூறப்படும் வழக்கு அம்மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அரவிந்த் குமார் விசாரணைக்கு வந்தது. ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரியிருந்தனர்.

இம்மனு மீதான விசாரணையில் ஆன்லைன் மூலமாக ஆஜராகியிருந்தார் இன்ஸ்பெக்டர் ரத்தோட். விசாரணையின் போது அவர் குளிர்பானம் அருந்தியதை தலைமை நீதிபதி பார்த்துள்ளார். சில நாட்களுக்கு முன் இதே போல் ஒரு வழக்கறிஞர் விசாரணையின் போது சமோசா சாப்பிட்டதை பார்த்து அனைவருக்கும் பகிரும் படி நீதிபதி சொன்னார்.

இந்நிலையில் இன்ஸ்பெக்டர் குளிர்பானம் குடித்ததற்கு அதே போல் நீதிபதி கண்டனம் தெரிவித்தார். மேலும், ‘நீங்கள் சாப்பிடுவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. இதையே தான் சமோசா சாப்பிட்டவரிடமும் சொன்னோம். எங்கள் முன்னே நீங்கள் சாப்பிடக் கூடாது. ஏனென்றால் மற்றவர்களும் ஆசைப்படுவார்கள்.

அதனால், அனைவருக்கும் கொடுக்க வேண்டும் அல்லது சாப்பிடக்கூடாது என்று கூறிய நீதிபதி, 100 குளிர்பானங்களை வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு வழங்கவும் இல்லையெனில் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட வேண்டும் என உத்தரவிட்ட சம்பவம் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

UpdateNews360 Rajesh

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.