இந்தியா

திருப்பதியில் அவலம்.. மார்பளவு தண்ணீரில் சடலம்!

திருப்பதியில் உள்ள ஒரு கிராமத்தில் இறந்தவரின் உடலை மார்பளவு தண்ணீரைக் கடந்து சென்று தகனம் செய்யும் அவலம் அரங்கேறியுள்ளது.

திருப்பதி: ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம் நாகலாபுரம் அருகே உள்ளது சுருட்டுப்பள்ளி என்ற கிராமம். இந்த கிராமத்தில் கஸ்தூரி நாயுடு என்பவர் வசித்து வந்தார். இவருக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில், அவரது உடலை குடும்ப வழக்கப்படி தகனம் செய்வதற்கு குடும்பத்தினர் தயாராகினர். ஆனால், அந்த ஊரின் சுடுகாடு ஓடையை அடுத்து உள்ளது. இதன் காரணமாக, அந்தக் கிராமத்தில் யாராவது இறந்து விட்டால், உடலை ஓடையைக் கடந்து தான் எடுத்துச் சென்று அடக்கம் செய்ய வேண்டும்.

இதனிடையே, வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, திருப்பதி மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதனால் சுருட்டுப்பள்ளி கிராமத்தில் உள்ள அந்த ஓடையிலும் மார்பளவு உயரம் தண்ணீர் பாய்ந்து ஓடுகிறது.

இதையும் படிங்க: 3வது மாடியில் இருந்து குதித்து மாணவன் தற்கொலை.. தனியார் கல்லூரியில் அதிர்ச்சி!

இந்த நிலையில், உயிரிழந்த கஸ்தூரியின் உடலை, கிராம பொதுமக்கள் மார்பளவு தண்ணீரில் கடந்து சென்று தகனம் செய்தனர். ஏற்கனவே ஓடையைக் கடந்து தான் சுடுகாட்டுக்குச் செல்ல வேண்டியுள்ளதால், தற்போது பெய்த மழையால் மேலும் நீர் அதிகரித்து காணப்படுவதால் பொதுமக்கள் மிகவு சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். எனவே, இதற்குத் தேவையான மாற்றுப் பாதையை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Hariharasudhan R

Recent Posts

அந்த நடிகை சொன்ன ஒரே காரணத்தால் தனது பெயரையே மாற்றிக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! இதான் விஷயமா?

ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…

8 hours ago

டெலிவரி கொடுக்க வந்த இளைஞர் அத்துமீறல்.. டெலிவரி பாயை நிலைகுலைய வைத்த பெண்..!!

தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…

9 hours ago

குப்புற கவிழ்ந்த குபேரா… உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பிரபல நடிகை.. போட்டுடைத்த பிரபலம்!!

தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…

9 hours ago

நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எங்களுக்கு- ரசிகர்களுக்கு அந்த விஷயத்தில் பேருதவி செய்த தனுஷ்?

3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…

10 hours ago

இளைஞருக்கு இப்படி ஒரு மரணமா? கொந்தளித்த பொதுமக்கள் : மறியலால் போக்குவரத்து நெரிசல்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…

11 hours ago

இப்போ வரைக்கும் அந்த பணத்தை திருப்பி கொடுக்கலை- பிரேம்ஜியிடம் ஏமாந்த பிரபல நடிகர் ஓபன் பேட்டி…

மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…

11 hours ago

This website uses cookies.