பிஎஃப்ஐ அமைப்பு ரூ.5.06 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் : கேரள அரசு போட்ட ஸ்கெட்ச்… நீதிமன்றம் போட்ட உத்தரவு!!

Author: Udayachandran RadhaKrishnan
27 September 2022, 7:14 pm
Kerala PFI - Updatenews360
Quick Share

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் நடத்திய போராட்டத்திற்கு ரூ.5.06 கோடி இழப்பீடு வழங்க கேரள அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மீது பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டுவது உட்பட பல புகார்கள் எழுந்த நிலையில் தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து 23ஆம் தேதி கேரள மாநிலத்தில் அந்த அமைப்பு முழு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. மேலும் போராட்டத்தின் போது பேருந்துகள், கார்கள், ஆட்டோக்களை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினர்.

இந்த நிலையில் 75 பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், கேரள மாநில சாலை போக்குவரத்து கழகம் உயர்நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு தொடுத்தது.

அந்த வழக்கில் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு பொது சொத்துக்களை சேதப்படுத்தியதற்காக ரூ.5.06 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

Views: - 404

0

0