இருமுடி கட்டி சபரிமலைக்கு யாத்திரை : 18 படி ஏறி ஐயப்பனை தரிசனம் செய்த கேரள பாதிரியார்!!!

இருமுடி கட்டி சபரிமலைக்கு யாத்திரை : 18 படி ஏறி ஐயப்பனை தரிசனம் செய்த கேரள பாதிரியார்!!!

கேரளாவில், மார்க்., கம்யூ.,யைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரான மனோஜ், தேவாலயத்தில் பாதிரியாராக உள்ளார்.

இவருக்கு தேவாலயத்தில் சேவை செய்ய திருச்சபையால் உரிமம் வழங்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், பிரசித்திபெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்ல விரும்பிய மனோஜ், இதற்காக, 41 நாள் விரதத்தை மேற்கொண்டு உள்ளார்.

இது குறித்து அறிந்த தேவாலய நிர்வாகம், அவரிடம் கேள்வி எழுப்பியதுடன், கிறிஸ்துவ கோட்பாடுகள், விதிகளை மீறியதாக குற்றஞ்சாட்டினர்.

இதை ஏற்றுக் கொண்ட அவர், தேவாலய சேவைக்காக தனக்கு அளிக்கப்பட்ட உரிமம் மற்றும் அடையாள அட்டையை திருப்பி அளித்துள்ளார்.

இது குறித்து பேசிய மனோஜ், என் சபரிமலை பயணத்தால், தேவாலய நிர்வாகத்துக்கு எந்த சிரமும் அளிக்க விரும்பவில்லை. அவர்களின் நிலைப்பாட்டை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. நான் எந்த தவறும் செய்யவில்லை என உறுதியாக நம்புகிறேன்.

கிறிஸ்துவ மதத்தைப் போலவே ஹிந்து மதத்தையும் புரிந்து கொள்வதே என் நோக்கம். விரதத்தை தொடர்கிறேன். வரும் 20ம் தேதி சபரிமலை செல்வது உறுதி. தேவாலய சேவைக்கான உரிமத்தை மட்டும்தான் திருப்பி தந்துள்ளேன். பாதிரியாராக என் பணி தொடரும் என கூறினார்.

அதைத்தொடர்ந்து அவர் நேற்று சபரிமலை சென்றார். 41 நாள் விரதம் இருந்து, நேற்று திருமலை மகாதேவ கோயிலில் இருமுடி கட்டி அங்கு மரக்கன்று நட்டு சபரிமலை பயணித்தார்.

பந்தலம் அரண்மனை, எரிமேலி, பம்பை ஆகிய இடங்களில் வழிபட்ட மனோஜ், 18 படி ஏறி ஐயப்பனை தரிசனம் செய்தார். அவருடன் 5 பக்தர்கள் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சபரிமலை செல்வதற்கான கறுப்பு வேட்டியுடன் அவர் இருக்கும் புகைப்படங்கள் வலைதளங்களில் பரவி வரும் சூழலில், தனக்கு எதிரான கருத்துக் களுக்கு பதிலளித்துள்ள மனோஜ், ”சாதி, மதம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைவரையும் நேசிக்க கடவுள் கேட்டுக் கொண்டுள்ளார். ”பிறரை நேசிப்பது அவர்களின் செயல்களோடு நம்மை சேர்க்கிறது. நான் கடவுளின் கோட்பாட்டை பின்பற்றுகிறேன்,” என குறிப்பிட்டு உள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.