உக்ரைன் மீதான போரை ரஷ்யா நிறுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உக்ரைன் மீது ரஷ்யா படைகள் 3வது நாளாக இன்று தொடர்ந்து போர் புரிந்து வருகிறது. உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, ரஷ்ய படைகள், உக்ரைனை சூறையாடி வருகிறது. சக்தி வாய்ந்த குண்டுகள் மற்றும் ஆயுதங்களால் உக்ரைன் நாட்டின் ராணுவ தளவாடங்கள் மற்றும் விமான தளங்கள் அழிக்கப்பட்டன. இதற்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது.
இந்தத் தாக்குதலில் இதுவரையில் நூற்றுக்கணக்கான உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ரஷ்யா தரப்பில் 3500 வீரர்கள் உயிரிழந்திருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைனில் ராணுவ ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், தலைநகர் கிவ்-வை நோக்கி ரஷ்ய படைகள் முன்னேறியுள்ளன. டாங்கிகள், போர் விமானங்களின் மூலம் கிவ்வில் உள்ள முக்கிய ராணுவப் பகுதிகளை தாக்கி வருகின்றன.
ஸ்வீடன், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு ராணுவ மற்றும் ஆயுத உதவிகளை செய்து வருகிறது.
இதனிடையே, மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக, உக்ரைன் ராணுவம் களத்தில் நின்று திடகார்த்தமாக போரிட்டு வருவதாக, அந்நாட்டு அதிபர் ஜெலன்ஷ்கி அடிக்கடி வீடியோ வெளியிட்டு நம்பிக்கை கொடுத்து வருகிறார். அதேவேளையில், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் ஆதரவை திரட்டி வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடியை தொலைபேசி மூலம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஷ்கி தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் எங்களுக்கான ஆதரவை வழங்குமாறும், ரஷ்யாவின் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பாளர்கள் எங்கள் நிலத்தில் உள்ளதால், அவர்களை தடுத்து நிறுத்த ஒன்றிணைய வருமாறு கோரிக்கை விடுத்தார். அப்போது, இருநாடுகளிடையேயான போரில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு பிரதமர் மோடி வேதனை தெரிவித்தார்.
உக்ரைன் அதிபருடனான உரையாடலுக்கு பிறகு, உக்ரைன் – ரஷ்யா இடையேயான போரை நிறுத்த வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். இருநாடுகளும் சமாதானப் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.