அரசின் நலத்திட்ட பயனாகிளுடன் காணொலியில் பிரதமர் மோடி கலந்துரையாடிய போது கண்கலங்கிய காட்சி வைரலாகி வருகிறது.
குஜராத்தின் பரூச் மாவட்டத்தில் உள்ள அரசின் நலத்திட்ட பயனாளிகளுடன் பிரதமர் மோடி காணொலியில் கலந்துரையாடினார். அப்போது கண் பார்வையில்லாத மாற்றுத்திறனாளி அயூப் படேல் என்பவருடன் பேசினார்.
அவரிடம் பேசிய பிரதமர் மோடி, மகள்களை படிக்க வைக்கிறீர்களா என கேட்டார். அதற்கு அவர் தனது மூன்று மகள்களில் ஒருவரை மருத்துவராக்க விரும்புவதாக கூறினார்.
மருத்துவ படிப்பை தேர்ந்தெடுக்க காரணம் என்ன என பிரதமர் மோடி அயூப் படேலின் மகளிடம் கேட்டதற்கு கண்பார்வையற்ற தந்தைக்கு பார்வை வர செய்வதற்காக மருத்துவம் படிக்க விரும்புவதாக கூறினார்.
இதைக்கேட்ட பிரதமர் சற்று நேரம் அமைதியானதுடன் கண்கலங்கினார். சிறிது நேரம் கண்ணீர் வர, நா தழுத்து பேச முடியாமல் இருந்த பிரதமர், கருணையே உங்கள் பலம் என கூறியதுடன், மகளின் மருத்துவராகும் கனவை நனவாக்க உதவி தேவைப்பட்டால் தன்னை அணுகுமாறு கூறினார்.
இந்த கூட்டம் நடைபெற்ற போது, சுற்றியிருந்தவர்கள் அனைவரும் பிரதமரின் செயலுக்கு கைத்தட்டினர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வரைலாகி வருகிறது.
பாகிஸ்தானுக்கு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்துள்ளது. இதற்கு உலகமே இந்தியாவை பாராட்டி…
விஜய்க்கு ஒன்னும் தெரியாது தவெக தலைவராக பரிணமித்திருக்கும் விஜய் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளவுள்ளார். தனது…
சிவகாசியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் 71வது பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது குறித்த அதிமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…
கிரிக்கெட்டின் தல கிரிக்கெட் ரசிகர்களால் தல என அழைக்கப்படுபவர் தோனி. இவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக திகழ்ந்தவர்…
தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம், கொண்டாபூர் மண்டலம் கரகுர்த்தி கிராமத்தை சேர்ந்த சுபாஷ் (42), தனது மகன் மரியன் (13),…
திண்டுக்கல் மாநகராட்சி காமராசர் பேருந்து நிலையத்தில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மலைப்பகுதிக்கு செல்லும் 9 புதிய புற நகர் பேருந்துகள்,…
This website uses cookies.