அரசின் நலத்திட்ட பயனாகிளுடன் காணொலியில் பிரதமர் மோடி கலந்துரையாடிய போது கண்கலங்கிய காட்சி வைரலாகி வருகிறது.
குஜராத்தின் பரூச் மாவட்டத்தில் உள்ள அரசின் நலத்திட்ட பயனாளிகளுடன் பிரதமர் மோடி காணொலியில் கலந்துரையாடினார். அப்போது கண் பார்வையில்லாத மாற்றுத்திறனாளி அயூப் படேல் என்பவருடன் பேசினார்.
அவரிடம் பேசிய பிரதமர் மோடி, மகள்களை படிக்க வைக்கிறீர்களா என கேட்டார். அதற்கு அவர் தனது மூன்று மகள்களில் ஒருவரை மருத்துவராக்க விரும்புவதாக கூறினார்.
மருத்துவ படிப்பை தேர்ந்தெடுக்க காரணம் என்ன என பிரதமர் மோடி அயூப் படேலின் மகளிடம் கேட்டதற்கு கண்பார்வையற்ற தந்தைக்கு பார்வை வர செய்வதற்காக மருத்துவம் படிக்க விரும்புவதாக கூறினார்.
இதைக்கேட்ட பிரதமர் சற்று நேரம் அமைதியானதுடன் கண்கலங்கினார். சிறிது நேரம் கண்ணீர் வர, நா தழுத்து பேச முடியாமல் இருந்த பிரதமர், கருணையே உங்கள் பலம் என கூறியதுடன், மகளின் மருத்துவராகும் கனவை நனவாக்க உதவி தேவைப்பட்டால் தன்னை அணுகுமாறு கூறினார்.
இந்த கூட்டம் நடைபெற்ற போது, சுற்றியிருந்தவர்கள் அனைவரும் பிரதமரின் செயலுக்கு கைத்தட்டினர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வரைலாகி வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது. இதில்…
தி.மு.க நிர்வாகிகளை கைது செய்தால் மட்டுமே உடலை வாங்குவோம் என் உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனை பிணவறை முன்பு ஆர்ப்பாட்டத்தில்…
லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14 ஆம்…
அஜித்குமாரின் நிபந்தனைகள் “குட் பேட் அக்லி” திரைப்படத்தை தொடர்ந்து அஜித்குமார் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. சமீப மாதங்களாக…
கள்ளத்தொடர்பால் பல சம்பவங்கள் அரங்கேறி வருவது வாடிக்கையாகிவிட்டது. அது கொலை அல்லது தற்கொலையில் முடிவது அதிகரித்து வருகிறது. கடலூர் மாவட்டம்…
கதாநாயகனாக அறிமுகமாகும் சூர்யா சேதுபதி விஜய் சேதுபதியின் மகனான சூர்யா சேதுபதி கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் “பீனிக்ஸ்”. சூர்யா சேதுபதி…
This website uses cookies.