மத்திய அரசு கட்டி வரும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியாவின் தற்போதைய நாடாளுமன்ற கட்டிடம் 100 ஆண்டுகள் பழமையானது. மாநிலங்களின் உருவாக்கம் காரணமாக எம்பிக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால், தற்போதைய நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் அமருவது அவ்வளவு எளிதான காரியமல்ல என்று மத்திய அரசு கருதுகிறது.
எனவே, ராஜபாதை சீரமைப்பு மற்றும் குடியரசு துணை தலைவர் இல்லம், பிரதமர் இல்லம் உள்ளிட்ட புதிய கட்டுமானங்கள் அடங்கிய சென்டிரல் விஸ்டா திட்டத்தின் ஒரு அங்கமாக புதிய நாடாளுமன்றம் கட்ட மத்திய அரசு திட்டமிட்டது. அதன்படி, அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் வரைபடத்தையும் வெளியிட்டது.
இதைத் தொடர்ந்து, கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இதற்கான அடிக்கல்லை பிரதமர் மோடி நாட்டினார். தொடர்ந்து கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றது. 2023ம் ஆண்டில் நாடாளுமன்ற புதிய கட்டிடம் திறக்கப்படும் என்று கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திடீரென ஆய்வு செய்தார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.