தமிழகத்தில் திமுக – காங்கிரஸ் கூட்டணி துடைத்தெறியப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சார பயணத்தை கன்னியாகுமரியில் இருந்து தொடங்க பிரதமர் மோடி திட்டமிட்டார். அதன்படி, கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் மிகப்பெரிய பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டது. கேரளாவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நிகழ்ச்சிக்கு வந்தார். அவருக்க கட்சியினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
பின்னர் மேடையில் பிரதமர் மோடி பேசியதாவது :- நாட்டை துண்டாட நினைப்பவர்களை காஷ்மீர் மக்கள் தூக்கி எறிந்துள்ளனர். அதேபோல, தமிழ்நாட்டிலும் மக்கள் செய்வார்கள். திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சிகளின் கர்வத்தை தமிழ்நாடு அடக்கும். தமிழ்நாட்டில் இண்டியா கூட்டணி எடுபடாது ; திமுக – காங்கிரஸ் கூட்டணி துடைத்தெறியப்படும்.
திமுக – காங்கிரஸ் இண்டியா கூட்டணி தமிழ்நாட்டில் எந்தவித வளர்ச்சி திட்டங்களையும் முன்னெடுக்க முடியாது. திமுக – காங்கிரஸ் இண்டியா கூட்டணி கொள்கையே ஆட்சிக்கு வந்து கொள்ளை அடிப்பதே இலக்கு ஆகும். காங்கிரஸ் ஆட்சியில் முக்கிய பிரமுகர்களுக்கான ஹெலிகாப்டர்கள் வாங்குவதிலும் கூட ஊழல் செய்தார்கள்.
கன்னியாகுமரி மாவட்ட மக்களை எப்படியெல்லாம் சுரண்டலாம் என திமுக – காங்கிரஸ் இணைந்துள்ள இண்டியா கூட்டணி காத்து கொண்டிருக்கிறது. மார்த்தாண்டம் – பார்வதிபுரம் இடையே மேம்பாலம் வேண்டும் என குமரி மக்கள் பல ஆண்டுகளாக போராடினார்கள். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் குமரி மக்களின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. பாஜக அரசு வந்த பிறகு தான் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது.
கன்னியாகுமரியில் ஏற்பட்டிருக்கும் ஆதரவு அலையைப் பார்த்து டெல்லியில் எதிர்கட்சிகளுக்கு தூக்கம் கெட்டுவிட்டது. திமுக, காங்கிரஸ் செய்த தப்புக்கும், பாவத்திற்கும் பதில் சொல்ல வேண்டிய காலம் வந்துவிட்டது. அவர்கள் கட்டாயம் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
இலங்கை கடற்பகுதியில் யார் செய்த தவறுக்காக மீனவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள் என்பதை நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். ஜல்லிக்கட்டிற்கு தடை ஏற்பட்ட போது திமுகவும், காங்கிரசும் வாய் மூடிக் கொண்டிருந்தன. தமிழ்நாட்டில் அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கை டிவியில் காட்ட கூட திமுக அரசு தடை விதித்தது, எனக் கூறினார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.