பிரதமர் மோடி பெண்களுடன் கார்பா நடனம் ஆடுவது போன்ற வீடியோ வெளியாகிய நிலையில், இது தொடர்பாக அவர் விளக்கமளித்துள்ளார்.
AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் DeepFake என்ற செயலி டிரெண்டிங்கில் இருந்து வருகிறது. இந்த செயலியின் மூலம் ஒரு புகைப்படத்தையோ அல்லது வீடியோவையோ மார்பிங் செய்து உண்மையான வீடியோ போல சித்தரிக்க முடியும். அதேபோல, ஒருவரின் குரலையும் தேவைக்கேட்ப மாற்றிக்கொள்ளலாம்.
அண்மையில், நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, கத்ரினா கைஃப், கஜோல் ஆகியோரின் வீடியோக்கள் ஆபாசமாக மார்பிங் செய்யப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல, பிரதமர் மோடியின் குரலை பயன்படுத்தி, தமிழ் பாடல்கள் பாடிய ஆடியோ சமூக வலைதளங்களி வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பாஜகவினரும் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.
இந்த சூழலில், பிரதமர் மோடி, பெண்களோடு சேர்ந்து கார்பா நடனம் ஆடுவது போன்ற DEEPFAKE வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.
இது தொடர்பாக, டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, “நான் கார்பா நடனம் ஆடியது போன்ற ஒரு வீடியோவை சமீபத்தில் பார்த்தேன். இதுபோன்ற போலி வீடியோக்கள் மிகவும் கவலை அளிக்கின்றன. இது குறித்து சாட்ஜிபிடி குழுவினருடன் பேசி, எச்சரித்துள்ளேன். தொழில்நுட்பம் பொறுப்புடன் கையாளப்பட வேண்டும். ஊடகங்கள் இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்,”என்று கூறினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.