ஆந்திர மாநிலம் அணக்காப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அச்சுதாபுரத்தில் “காண்டிக்ஸ்” என்ற பெயரிலான ஆயத்த ஆடைகளை உற்பத்தி செய்யும் பன்னாட்டு நிறுவனம் செயற்பட்டு வருகிறது.
அந்த நிறுவனத்தின் அருகில் மருந்து தயாரிப்பு கம்பெனி ஒன்று உள்ளது. அச்சுதாபுரத்தில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இந்த இரண்டு நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து நேற்று மாலை வெளிப்பட்ட விஷவாயு அந்த பகுதி முழுவதும் பரவியது.
இரண்டு நிறுவனங்களிலும் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். விசவாயு பரவியதும் மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அங்கிருந்து வெளியேறிவிட்டனர்.
ஆனால் காண்டிக்ஸ் ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனத்தில் பணியாற்றும் பெண்களில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் விஷவாயுவை சுவாசித்து மயக்கம் அடைந்தனர்.
மயக்கம் அடைந்த பெண் ஊழியர்கள் உடனடியாக சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால் அந்த பகுதியில் செயல்படும் நிறுவனங்களுக்கு தற்போது தற்காலிக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விஷவாயு கசிவு பற்றிய தகவல் அறிந்து மாவட்ட உயரதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.