ஆந்திரா: குழந்தைகளுடன் தன்னை கைவிட்டு வேறொரு பெண்ணுடன் ரகசிய தொடர்பில் இருந்த காவல் ஆய்வாளர் கணவனை கையும் களவுமாக பிடித்து தட்டி கேட்ட மனைவியால் பரபரப்பு நிலவியது.
ஆந்திர மாநிலம் நெல்லூரில் ஆயுதப்படை போலீசில் காவல் ஆய்வாளராக பணியாற்றுபவர் வாசு. அவருக்கும், சாம்ராஜ்ஜியம் என்பவருக்கும் 30 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்று மகன், மகள் ஆகியோர் வாரிசுகளாக உள்ளனர்.
2017ம் ஆண்டு மனைவியை கைவிட்ட வாசு அடுத்த ஆண்டு மௌனிகா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஆனால் சமீபகாலமாக நெல்லூரில் உள்ள போஸ்டல் காலனியில் வசிக்கும் பெண் ஒருவருடன் காவல் ஆய்வாளர் வாசு ரகசிய தொடர்பில் இருந்து வந்தார். தன்னை குழந்தைகளுடன் கைவிட்டு சென்ற கணவன் மீது கடும் கோபத்தில் இருந்த சாம்ராஜ்யத்திற்கு இந்த தகவல் கிடைத்தது.
இதுதான் சமயம் என்று கருதி காவல் ஆய்வாளரின் ஆசை நாயகி வீட்டுக்கு உறவினர்களுடன் சென்ற சாம்ராஜ்யம், கதவை தட்டி திறக்க செய்து தன்னுடைய கணவன், அவருடைய ஆசை நாயகி ஆகிய இரண்டு பேருடனும் வாக்குவாதம் செய்து இது நியாயமா என்று தட்டிக் கேட்டார். உறவினர்கள் முன்னிலையில் கள்ளத்தொடர்பில் இருந்த காவல் ஆய்வாளரை அவருடைய மனைவி கையும் களவுமாக பிடித்து தட்டிக் கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த நெல்லூர் போலீசார் விரைந்து சென்று ஆயுதப்படை காவல் ஆய்வாளர் வாசு, அவருடைய மனைவி சாம்ராஜ்யம் ஆகிய இரண்டு பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்துகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.