ரூ.34 ஆயிரத்துக்கு காவல்நிலையத்தை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று கேரள காவல்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பொதுவாக திருமண மண்டபங்கள், வீடுகள், கார்கள், பைக்குகள், சைக்கிள்கள் உள்ளிட்டவை வாடகைக்கு கொடுத்து பார்த்திருப்போம். ஆனால், கேரளாவில் சற்று வித்தியாசமாக, காவல்நிலையத்தை வாடகைக்கு விட்டு அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது அம்மாநிலக் காவல்துறை.
ரூ.34 ஆயிரத்தை செலுத்தினால் காவல்நிலையத்தை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று கட்டணப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், போலீஸ் நிலையத்துடன் இன்ஸ்பெக்டர் மோப்பநாய், வயர்லெஸ் கருவிகள் உள்ளிட்டவைகளையும் கட்டணம் செலுத்தி வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒவ்வொரு வசதிக்கான கட்டண பட்டியலையும் வெளியிட்டிருக்கிறது. நாள் ஒன்றுக்கு போலீஸ் நிலையத்திற்கு ரூ12 ஆயிரம், வயர்லெஸ் கருவிகளுக்கு ரூ12ஆயிரத்து 130, மோப்ப நாய்க்கு ரூ7ஆயிரத்து 280, போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ரூ.3 ஆயிரத்து 35 முதல் ரூ.3ஆயிரத்து 340 வரை என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இன்ஸ்பெக்டருக்கு பதிலாக சிவில் போலீஸ அதிகாரிக்கான கட்டணம் ரூ610 ஆகும். காவல்துறை வெளியிட்டுள்ள இந்த பட்டிலின்படி, போலீஸ் இன்ஸ்பெக்டரை விட போலீஸ் மோப்ப நாய்க்கு வாடகை அதிகமாக இருக்கிறது. ஆனால் அதற்கான காரணம் தெளிவாக கூறப்படவில்லை.
காவல்துறையின் இந்த முடிவுக்கு பொதுமக்களில் பலரும், அரசு அதிகாரிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இருப்பினும், அரசின் நிதி நெருக்கடியை சரிசெய்வதற்கான திட்டம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.