”இன்னைக்கு ஒரு புடி”…காவல்நிலையத்தில கூட்டாஞ்சோறு சமைத்த காவலர்கள் : சிக்கனால் எழுந்த சிக்கல்!!!
கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள இலவன்திட்டா காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள், காவல் நிலைய வாகனத்தில் கடைக்கு சென்று சிக்கன் வாங்கி, அதனை எடுத்து வந்து காவல் நிலையத்தில் வைத்து சிக்கன் மற்றும் கிழங்கை சமைத்து சாப்பிட்டுள்ளனர்.
இந்த காட்சிகளை முழுவதுமாக வீடியோவாக பதிவு செய்து அதனை சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளனர். பதிவிட்ட ஒரு சில நாட்களிலேயே இந்த காவல் நிலைய சமையல் வீடியோ பலரையும் கவர்ந்துள்ளது .
பலரும் இந்த வீடியோவுக்கு நல்ல வரவேற்பும் அளித்து நல்ல விதமான கமெண்ட்களையும் பதிவு செய்து வந்துள்ளனர்.
இதை தொடர்ந்து, இந்த சமையல் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனதையடுத்து, பணிநேரத்தில் காவல் நிலையத்தில் வைத்து சமையல் செய்தது மற்றும் அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என அந்த நிலைய காவலர்களுக்கு உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும், காவல்நிலைய வாகனத்திலேயே சென்று சமையலுக்கு தேவையான பொருட்களை வாங்கி வந்து அதனை காவல் நிலையத்திலேயே வைத்து சமைத்து எல்லா காவல் அதிகாரிகளும் ரசித்து சமைத்து ருசித்தது வீடியோவாக எடுத்து பதிவிட்டு பொறுப்பற்ற நிலையில் காவல் நிலையத்தில் செயல்பட்ட அந்த வீடியோ வைரல் காட்சிகள் பலரையும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
பணி நேரத்தில் பொறுப்பற்ற வகையில் ரீல்ஸ் போடுவது அவர்களின் அலட்சியத் தன்மையை காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
எதையோ செய்ய நினைத்தது இப்படி வசமாக மாட்டிகொண்ட காவலர்கள் செயல்தான் கேரளாவில் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
This website uses cookies.