ஒரு எம்எல்ஏ கூட எனக்கு எதிராக இருந்தாலும் அவமானம்… பதவி முக்கியமல்ல, மக்களின் அன்பு தான் சொத்து : உத்தவ் அதிரடி அறிவிப்பு!!

மகாராஷ்டிரா அரசு மீது ஏற்பட்ட அதிருப்தியில் அமைச்சர் உட்பட 13 எமஎம்லஏக்கள் குஜராத்தில் முகாமிட்டிருந்த நிலையில் அசாமில் தற்போது முகாமிட்டுள்ளனர். சிவசேனா எம்எல்ஏக்கள் தொடர்பில் இல்லாமல் இருப்பதால் மகாராஷ்டிரா அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று கட்சியுடன் ஆலோசனை செய்ய விருந்த மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ்தாக்கரேவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், இன்று சமூக வலைதளம் மூலம் பேசினார்.

அப்போது பேசிய அவர், சிவசேனா தமது இந்துத்துவா கொள்கையை ஒருபோதும் கைவிட்டது இல்லை. சிவசேனா இந்துத்துவா கொள்கையில் இருந்து விலகிச் சென்றதும் இல்லை. இந்துத்துவா என்பது எங்களது மூச்சு. இந்துத்துவா என்பது எங்களது ஆன்மா.

மகாராஷ்டிராவில் இருந்து வெளியே சென்று எம்.எல்.ஏக்கள் சிலர் என்னை தொடர்பு கொண்டு திரும்பி வருவதாக கூறியுள்ளனர். காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் நான் முதல்வராக இருக்கக் கூடாது என கூறினால் அது வேறு விவகாரம்.

இன்று காங்கிரஸ் கட்சியின் கமல்நாத்தும் கூட நான் முதல்வராக தொடர வேண்டும் என்கிறார். ஆனால் என்னுடைய கட்சியினர் நான் முதல்வராக இருக்கக் கூடாது என்று சொல்வது எனக்கு அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் உள்ளது.

சிவசேனா எம்.எல்.ஏக்கள், நான் முதல்வர் பதவியில் நீடிக்கக் கூடாது என விரும்பினால் முதல்வர் பங்களாவில் இருந்து அப்படியே வெளியேற தயாராக இருக்கிறேன். என்னுடைய ராஜினாமா கடிதம் தயாராகவே உள்ளது.என்னுடன் சிவசேனா கட்சியின் தொண்டர்கள் இருக்கும் வரை எனக்கு எந்த ஒரு கவலையும் இல்லை.

சிவசேனா எம்.எல்.ஏக்கள் அழைத்துச் செல்லப்பட்டார்களா? அவர்களாகவே சென்றார்களா? என்பது தொடர்பான பிரச்சனைக்குள் நான் செல்ல விரும்பவும் இல்லை. முதல்வர் பதவி என்பது வரும் போகும்; ஆனால் மக்கள் வைத்துள்ள பற்றுதான் அசைக்க முடியாத சொத்து. கடந்த 2 ஆண்டுகள் மக்களின் பேரன்பை போதுமான அளவு பெற்றிருக்கிறேன்.

எம்.எல்.ஏக்கள் ஆதரவு எண்ணிக்கை பிரச்சனை இல்லை; எனக்கு எதிராக எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். ஒரே ஒரு எம்.எல்.ஏ. அல்லது ஒரே ஒரு நபர் எனக்கு எதிராக இருந்தாலும் நான் முதல்வர் பதவியில் இருந்து விலகிவிடுகிறேன்.

ஒரே ஒரு எம்.எல்.ஏ. எனக்கு எதிராக இருந்தாலும் அது எனக்கு அவமானம். சிவசேனாவை சேர்ந்த யார் ஒருவரும் முதல்வராக முடியும். நேருக்கு நேராக என்னிடம் சொல்லுங்கள்.. நான் முதல்வர் பதவியில் இருந்து விலக தயாராகத்தான் இருக்கிறேன். எனக்கு சிலர் துரோகம் செய்துவிட்டதாக நான் கருதுகிறேன். இவ்வாறு உத்தவ் தாக்கரே கூறினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

14 hours ago

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

14 hours ago

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

15 hours ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

16 hours ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

16 hours ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

17 hours ago

This website uses cookies.