மொராக்கோவை தொடர்ந்து திரிபுராவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. அலறி ஓடிய மக்கள்!!!
சமீபகாலமாக இந்தியாவின் பல பகுதிகளில் அதிக அளவில் நிலநடுக்கங்கள் பதிவாகி வருகின்றன. அந்தவகையில் தற்பொழுது, திரிபுராவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 4.4 என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ளது என்று நில அதிர்வுக்கான தேசிய மையம் (National Center for Seismology) தெரிவித்துள்ளது.
இன்று மதியம் 3.48 மணியளவில் திரிபுராவின் வடக்கு திரிப்புரா மாவட்டத்தில் அமைந்துள்ள தர்மநகருக்கு வடகிழக்கே 72 கிமீ தொலைவில், 4.4 ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கம் 43 கிமீ ஆழத்தில் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் உயிர்சேதம் மற்றும் பொருள்சேதம் ஏதும் ஏற்பட்டதா என்ற தகவல் வெளியாகவில்லை.
இதற்கிடையில், மொராக்கோ நாட்டின் மாரகேஷ் நகரத்தில் ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 632ஆக அதிகரித்துள்ளது.
மேலும், காயமடைந்த 300 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.நில நடுக்கம் ஏற்பட்ட இடத்தில் மீட்புப்பணி விரைவாக நடந்து வருகிறது.
மேலும், இடிபாடுகளில் பலர் சிக்கி இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. கடலோர நகரங்களான ரபாட், காசாபிளாங்கா மற்றும் எஸ்ஸௌயிராவிலும் இந்தவலுவான நடுக்கம் உணரப்பட்டதாக அந்நாட்டு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.