15 வயது சிறுமியை சீரழித்த பாதிரியாரின் 17 வயது மகன் : கிறிஸ்துவ மதத்துக்கு மாற மறுத்த குடும்பத்துக்கு கொலை மிரட்டல்!!

Author: Udayachandran RadhaKrishnan
12 December 2022, 10:15 am
Child Rape - Updatenews360
Quick Share

வறுமையை பயன்படுத்தி தம்பதியரை கிறிஸ்துவ மதத்துக்கு மாற்ற முயற்சித்த பாதிரியாரின் 17 வயது மகன், சிறுமியை பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொப்பல் மாவட்டம் காரடகி பகுதியில் ஒரு தம்பதி, தங்களது 15 வயது மகளுடன் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் தம்பதியும், மகளும் வறுமையால் கஷ்டப்பட்டு வந்தனர்.

இதுபற்றி அறிந்ததும் காரடகியில் செருப்பு கடை நடத்தி வருபவரும், தேவாலயத்தின் பாதிரியாராகவும் உள்ள சாமுவேல் என்கிற சத்யநாராயண், அவரது மனைவி ஆகியோர் தம்பதிக்கு உதவிகள் செய்து வந்து உள்ளனர்.

பின்னர் அவர்கள் நைசாக பேசி தம்பதியையும், மகளையும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்ததாக கூறப்படுகிறது.

மதமாற்றப்பட்டாலும் தம்பதியும், அவர்களது மகளும் தங்களது கடவுளை வழிபட்டு வந்து உள்ளனர். ஆனால் இதற்கு சாமுவேலும், அவரது மனைவியும் எதிர்ப்பு தெரிவித்து வந்து உள்ளனர்.

இந்த நிலையில் சாமுவேலின் மகனான 17 வயது சிறுவன், தம்பதியின் மகளான 15 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தம்பதி, சாமுவேலிடம் தங்களது மதத்திற்கே திரும்ப விரும்புவதாக கூறியுள்ளனர். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சாமுவேல், தம்பதிக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்ததாக தெரிகிறது.

இதுகுறித்து அந்த தம்பதி காரடகி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின்பேரில் சாமுவேல், அவரது மனைவி, மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். தற்போது தலைமறைவாக உள்ள 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Views: - 293

0

0