உக்ரைன் மீது தொடுத்துள்ள போரை நிறுத்தும்படி ரஷ்ய அதிபர் புதினிடம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யாவிடம் போரை நிறுத்தும்படி பிரதமர் நரேந்திர மோடி சொல்ல வேண்டும் என்று டெல்லியில் உள்ள உக்ரைன் தூதரகம் மூலம் இன்று வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. இந்த வேண்டுகோளை ஏற்றுகொள்ளும் விதமாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை பிரதமர் மோடி இன்றிரவு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது, உக்ரைன் மீதான போரை உடனடியாக நிறுத்தும்படி புதினிடம் அவர் வலியுறுத்தினார். அத்துடன் இருநாடுகளுக்கும் இடையேயான பிரச்னைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் நேர்மையான முறையில் தீர்வு காண முயற்சிக்க வேண்டும் என்றும் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
இந்தியா -ரஷ்யா இடையேயான நீண்ட காலமாக நல்லுறவை கருத்தில் கொண்டு, உக்ரைனில் உள்ள பல்லாயிரக்கணக்கான இந்தியர்களின் பாதுகாப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் தரும்படியும் புதினிடம் மோடி கேட்டு கொண்டுள்ளார்.
உக்ரைன் -ரஷியா இடையேயான போரில் நடுநிலைமை வகிப்பதாக இந்தியா தெரிவித்திருந்துள்ள நிலையில், போரை உடனடியாக நிறுத்தும்படி ரஷ்ய அதிபரை, பிரதமர் மோடி கேட்டு கொண்டுள்ளது சர்வதேச அரங்கில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள தாண்டிகுடி கிராமத்தில் ஜனநாயக படப்பிடிப்புக்காக தமிழக வெற்றி கழக கட்சி தலைவரும் நடிகருமான விஜய்…
தமிழ்நாடு ட்ரெக்கிங் என்ற திட்டத்தின் கீழ் சுற்றுலா பயணிகள் தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களை சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.…
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
This website uses cookies.