இந்தியா

சிம்லாவில் சொந்த வீடு.. என்னை விட கம்மிதான் .. சொல்லாமல் சொன்ன ராகுல்

வயநாடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தியின் சொத்து விவரங்கள் வெளியாகியுள்ளது.

வயநாடு: வருகிற நவம்பர் 13ஆம் தேதி, கேரள மாநிலம் வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் இருந்து வயநாடு தொகுதி வேட்பாளராக பிரியங்கா காந்தி அறிவிக்கப்பட்டார். அவரை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சத்யன் மோக்கேரியும், பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸும் களமிறக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்று (அக்.23) பிரியங்கா காந்தி தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். இதனையடுத்து, இன்று (அக்.24) வயநாடு மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த நிலையில், பிரியங்கா காந்தியின் சொத்து விவரம், அவர் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தின் படி தெரிய வந்துள்ளது. இது குறித்து இந்தியத் தேர்தல் ஆணையத்தில் கிடைத்துள்ள ஆதாரங்களின் படி, பிரியங்கா காந்தி மற்றும் அவரது கணவரும், தொழிலதிபருமான ராபர்ட் வத்ராவிடம் மொத்தம் சுமார் 78 கோடி ரூபாய் சொத்து உள்ளது.

இதில் 12 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்கள் தனது பெயரில் இருப்பதாக பிரியங்கா காந்தி குறிப்பிட்டுள்ளார். இவற்றில் பொருட்களை தன்னிடம் இருப்பதாகப் பகிர்ந்து கொண்டார். அதேநேரம், இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லாவில் சுமார் 5.63 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வீடு தனக்குச் சொந்தமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஆந்திராவில் தர்பார் பட பாணியில் கூட்டு பாலியல் வன்கொடுமை.. சிறுவர்கள் கைது

அதேநேரம், கணவர் ராபர்ட் வதேராவிடம் 37.9 கோடி ரூபாய்க்கு மேல் அசையும் சொத்துக்கள் இருப்பதாகவும், ரூ.27.64 கோடிக்கு வீடு, நிலம் போன்ற அசையா சொத்துக்கள் இருப்பதாகவும் தனது பிரமாணப் பத்திரத்தில் பிரியங்கா காந்தி குறிப்பிட்டுள்ளார். மேலும், பிரியங்கா காந்தி வத்ரா மொத்தமாக 2023 – 2024 ஆம் நிதி ஆண்டில் 46.39 லட்சம் ரூபாய் சம்பாதித்துள்ளார்.

வாடகை, வங்கிகள் மற்றும் பிற இடங்களில் இருந்து வரும் வட்டி மூலம் இந்த வருமானம் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தனது கணவர் ராபர்ட் கொடுத்த கார், பல்வேறு வங்கிக் கணக்குகளில் சேமித்து வைத்த பணம் 1.15 கோடி ரூபாய் மதிப்புள்ள 4,400 கிராம் தங்கம் ஆகியவை உள்ளன.

முன்னதாக, தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்த பிறகு பேசிய ராகுல் காந்தி, தன்னை விட சிறப்பாக பிரியங்கா காந்தியால் வயநாட்டிற்குச் செய்ய முடியாது என ராகுல் காந்தி பேசினார். மேலும், வயநாடு தனது வீடு போன்றது என்றும், எப்போது வேண்டுமானாலும் வந்து செல்வேன் எனவும் அவர் கூறினார்.

Hariharasudhan R

Share
Published by
Hariharasudhan R

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

4 hours ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

5 hours ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

5 hours ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

5 hours ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

6 hours ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

7 hours ago

This website uses cookies.