பிளாஸ்டிக் பயன்படுத்த தடை : திருப்பதியில் கடும் சோதனை.. அணிவகுத்த வாகனங்கள்.. தரிசனத்திற்கு மேலும் தாமதமாகும் சூழல்!!

ஆந்திரா : திருப்பதி மலையில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தேவஸ்தானம் முழுமையாக தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டதைத் தொடர்ந்து அலிபிரி சோதனை சாவடியில் சோதனை நடைபெற்று வருவதால் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

திருப்பதி ஏழுமலையான் கோவில் அமைந்துள்ள திருமலையில் இன்று முதல் முழுமையாக பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் தடை செய்து நேற்று அறிவிப்பு வெளியிட்டதை அடுத்து திருப்பதியில் அமைந்துள்ள சோதனை சாவடியில் வாகனங்கள் கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.

திருப்பதி மலையில் பிளாஸ்டிக் பொருட்களை 2018 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி முதல் தடை செய்வதாக தேவஸ்தானம் அறிவித்து படிப்படியாக பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு தடை விதித்து வருகிறது.

முன்னதாக பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் கைப்பை ஆகியவற்றை தடைசெய்த தேவஸ்தான நிர்வாகம் பக்தர்கள் குடிநீர் தேவைக்காக திருமலையில் பல்வேறு பகுதிகளில் குடிநீர் சுத்தகரிப்பு இயந்திரங்களை நிறுவி இலவசமாக “ஜல பிரசாதம்” என்ற பெயரில் குடிநீர் வழங்கி வருகிறது.

இந்நிலையில் நேற்று திருப்பதி மலையில் முழுமையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு தடைவிதித்து தேவஸ்தான நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது.

இதன் காரணமாக பிளாஸ்டிக் பொருட்களை திருமலைக்கு கொண்டு செல்வது தடுக்கும் பொருட்டு திருப்பதியில் உள்ள அலிபிரி சோதனைச்சாவடியில் வாகனங்கள் முழுமையாக தேவஸ்தான ஊழியர்களால் சோதனை செய்யப்படுகிறது.

பக்தர்கள் கொண்டுவரும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் உட்பட அனைத்து பிளாஸ்டிக் பொருட்களையும் பறிமுதல் செய்த பின்னரே பக்தர்களை திருமலைக்கு அனுமதிக்கின்றனர்.

பலத்த சோதனை காரணமாக அலிபிரி சோதனை சாவடியில் சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

வார விடுமுறை நாட்களில் திருப்பதியில் தொடர்ந்து அதிக பக்தர்கள் குவிந்து வரும் நிலையில் இதே நிலை தொடர்ந்தால் பக்தர்கள் தீவிர சிரமத்திற்கு உள்ளாக நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

பிளீச்சிங் பவுடருக்கு பதில் கோலமாவு..கேள்வி கேட்ட செய்தியாளர் : நக்கலாக பதில் சொன்ன மேயர் பிரியா!

சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…

32 minutes ago

சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் லட்சணம் இதுதானா? திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…

50 minutes ago

ஒரே நாளில் தட்டிதூக்கிய ரெட்ரோ! முதல் நாள் கலெக்சனே இவ்வளவு கோடியா? அடேங்கப்பா!

ஆக்சன் கிங் சூர்யா? கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது.…

1 hour ago

முன்னாடியே இது நடந்திருக்கு, ஆனா இதான் ஃபர்ஸ்ட் டைம்? ரெட்ரோ படத்தை பிரித்து மேய்ந்த பயில்வான்!

ஆக்சன் அதகளம்… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது. முழுக்க…

2 hours ago

கதறி அழுத பிரியங்கா தேஷ்பாண்டே… 2வது திருமணத்திற்கு பிறகு நடந்த சம்பவம்!

விஜய் டிவியில் கலகலப்பான தொகுப்பாளராக வலம் வந்தவர் பிரியங்கா தேஷ்பாண்டே. ஆரம்பத்தில ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர்,…

2 hours ago

‘கயல்’ சீரியல் நடிகை தற்கொலை முயற்சி? கணவருடன் மனக்கசப்பு?!

கணவருடன் ஏற்பட்ட பிரச்னையால் கயல் சீரியல் நடிகை தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சன் டிவியில் பிரைம்…

3 hours ago

This website uses cookies.