உத்தரப்பிரதேசம்: கதர்னியாகாட் வனவிலங்கு சரணாலயத்தில் மூன்று வயது சிறுத்தையை அடித்துக்கொன்றது தொடர்பாக 10 பெண்கள் உட்பட 64 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் புதன்கிழமை அதிகாலையில் கதர்னியாகாட் சரணாலயத்திற்குள் உள்ள கத்தோடியா கிராமத்தில் புகுந்த சிறுத்தை, வயல்வெளியில் வேலை செய்துகொண்டிருந்த மூன்று பெண்கள் உட்பட 13 கிராம மக்களை காயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக தகவல் அறிந்த வனத்துறையினர் சிறுத்தையை வலை வீசி பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், அங்கு கூடியிருந்த அப்பகுதி கிராம மக்கள் சிறுத்தையை சுற்றி வளைத்து கட்டையால் தாக்கிக் கொன்றனர்.
கிராம மக்களின் தாக்குதலின்போது வனத்துறை ஊழியர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், குற்றவியல் திருத்தச் சட்டம், அரசுப்பணிக்கு இடையூறு ஏற்படுத்துதல், பொது ஊழியர்களைத் தாக்குதல் மற்றும் அரசுப் பணியைத் தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் கிராம மக்கள் 64 பேர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று வன அதிகாரி ஆகாஷ்தீப் பாதவான் தெரிவித்துள்ளார்.
மேலும், மூர்த்திஹா காவல் நிலையத்தில் வனத்துறையினரால் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், நாடு…
கலவையான விமர்சனம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் மே தினத்தை முன்னிட்டு வெளியான நிலையில் இத்திரைப்படத்திற்கு…
16 வயது சிறுவனுடன் 12 முறை உடலுறவு வைத்த டீச்சர் மீது 64 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம்…
கிளாசிக் ஜோடி கமல்ஹாசன்-ஸ்ரீதேவி ஜோடியை 80களின் காலகட்டத்தில் பலரும் கொண்டாடியது போல் ரஜினி-ஸ்ரீதேவி ஜோடியையும் பலரும் கொண்டாடினர். குறிப்பாக சொல்லவேண்டுமென்றால்…
மனைவியை கொலை செய்ய மது கொடுத்து கை, கால்களை கட்டி உல்லாசமாக இருந்துவிட்டு கழுத்தை நெறித்து கொன்ற ஜிம் மாஸ்டரின்…
வரிசையாக லைக் போட்ட விராட் கோலி பாலிவுட் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருபவர் அவ்னீட் கவுர். இவர் பல ஹிந்தி…
This website uses cookies.