சண்டிகர் : பஞ்சாப்பில் காங்கிரஸ் கொள்ளையடிப்பதாகவும், ஆம்ஆத்மி ஊழல் செய்வதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பாஜக வேட்பாளர்களை ஆதரித்து, பதான்கோட்டில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். அவர் பேசியதாவது :- பஞ்சாப் மாநிலத்தில் லட்சக்கணக்கான மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா சமயத்தில் கூட ஏழைகள் பசியில்லாமல் தூங்கும் வகையில் உணவுப் பொருட்களை வழங்கினோம்.
எல்லையில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களை காங்கிரஸ் அவமானப்படுத்தியது. பதன்கோட் தாக்குதலின் போது, நமது படைகள் மீது சந்தேகம் கூறி, காங்கிரஸ் தரம் தாழ்ந்து செயல்பட்டது. காங்கிரஸ் கட்சியின் ஜெராக்ஸ் காப்பிதான் ஆம்ஆத்மி கட்சி. பஞ்சாபில் காங்கிரஸ் கொள்ளையடித்தால், டெல்லியில் ஆம் ஆத்மி ஊழல் செய்கிறது.
ரிமோட் கண்ட்ரோல் குடும்பமான காங்கிரஸ் கட்சிக்கு பஞ்சாப்பில் மக்கள் பிரியா விடை அளிக்க வேண்டும். உங்களுக்காக 5 ஆண்டுகள் பணியாற்ற வாய்ப்பை ஏற்படுத்தி கொடுங்கள். வேளாண்மை, வணிகம், தொழில் ஆகியவை லாபகரமாக மாறும் என நான் உறுதியளிக்கிறேன், எனக் கூறினார்.
—
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.