பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அம்மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத்சிங் சித்து மீது அவரது தங்கை பகீர் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
பஞ்சாப் சட்டப்பேரவைக்கு வரும் பிப்.,20ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர தேர்தல் பகிளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த சூழலில், பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து மீது அமெரிக்காவில் உள்ள அவரது தங்கை பகீர் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது : – 1986ல் நவ்ஜோத் சிங் சித்து எங்களின் தந்தை இறந்தவுடன், தன்னையும், எனது தாயையும் கைவிட்டு விட்டார். இதனால், 1989ம் ஆண்டு எனது தாய் டெல்லி ரயில்நிலையத்தில் ஆதரவற்று இறந்து கிடந்தார். தனது 2 வயதில் தந்தை இறந்து விட்டதாக சித்து கூறுவது முற்றிலும் பொய். பணத்திற்காக அவர் எல்லோரையும் விட்டுவிட்டார், எனக் குறிப்பிட்டுள்ளார்.
அவரது இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக சித்து தரப்பில் இருந்து எந்தவிதமான மறுப்பும் தெரிவிக்காதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில், சித்து மீது அவரது சகோதரியின் இந்தப் பரபரப்பு குற்றச்சாட்டு பஞ்சாப் அரசியலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.