அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சேத்தன் சிங், பல்கலைக்கழக துணைவேந்தரை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதற்கு எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.
பஞ்சாப் மாநில சுகாதார அமைச்சர் சேத்தன் சிங் ஜூரமஜ்ரா, ஃபரித்கோட்டில் உள்ள குருகோவிந்த் சிங் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அவருடன் அதிகாரிகளும், பத்திரிக்கையாளர்களும் உடன் சென்றிருந்தனர்.
அப்போது, நோயாளிகளுக்கான வார்டுகளில் ஆய்வு செய்யும் போது, அங்கு சுகாதாரமற்ற நிலவியதைக் கண்டு அமைச்சர் சேத்தன் சிங் கோபமடைந்தார். மேலும், நோயாளிகளுக்கான படுக்கையில் பயன்படுத்தும் மெத்தை மிகவும் மோசமான நிலையில் இருப்பதை கண்ட அவர், இன்னும் கோபத்திற்கு ஆளானார்.
ஆத்திரமடைந்த அமைச்சர் படுக்கையின் நிலை குறித்து கேள்வி எழுப்பியவாறு, பாபா ஃபரித் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் ராஜ் பகதூரை அந்த மெத்தையில் படுக்க உத்தரவிட்டார். அதனை ஏற்று அவரும் அதில் படுத்து, மெத்தையின் நிலையை உணர்ந்தார்.
அமைச்சரின் இந்த செயலை அங்கிருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்தனர். அந்த வீடியோவில், “எல்லாம் உங்கள் கையில், எல்லாம் உங்கள் கையில்” என்று அமைச்சர் ஜூரமஜ்ரா படுக்கையில் இருந்து எழுந்தவுடன் மருத்துவரிடம் சொல்வது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
அமைச்சர் சேத்தன் சிங்கின் இந்த செயலுக்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அதாவது, அரசு மருத்துவமனையின் நிலையை கண்டு அமைச்சர் இந்த கோபம் அடைந்தது நியாயமாக இருந்தாலும் கூட, துணைவேந்தரை இப்படி அவமதிக்கலாமா..? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பர்கத் சிங் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஆம் ஆத்மி கட்சியின் மலிவான நாடகங்கள் நிறுத்தப்போவதில்லை. இன்று பாபா ஃபரித் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ராஜ் பகதூர் சிங், சுகாதார அமைச்சர் சேத்தன் சிங் ஜூரமஜ்ராவால் (+2 பாஸ்) பகிரங்கமாக அவமானப்படுத்தப்பட்டார். இந்த வகையான கும்பல் நடத்தை நமது மருத்துவ ஊழியர்களின் மன உறுதியைக் குலைக்கும்,” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதம், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், ஊழல் குற்றச்சாட்டில் தனது அப்போதைய சுகாதார அமைச்சர் விஜய் சிங்லாவை அமைச்சரவையில் இருந்து நீக்கியது குறிப்பிடத்தக்கது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.