அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சேத்தன் சிங், பல்கலைக்கழக துணைவேந்தரை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதற்கு எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.
பஞ்சாப் மாநில சுகாதார அமைச்சர் சேத்தன் சிங் ஜூரமஜ்ரா, ஃபரித்கோட்டில் உள்ள குருகோவிந்த் சிங் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அவருடன் அதிகாரிகளும், பத்திரிக்கையாளர்களும் உடன் சென்றிருந்தனர்.
அப்போது, நோயாளிகளுக்கான வார்டுகளில் ஆய்வு செய்யும் போது, அங்கு சுகாதாரமற்ற நிலவியதைக் கண்டு அமைச்சர் சேத்தன் சிங் கோபமடைந்தார். மேலும், நோயாளிகளுக்கான படுக்கையில் பயன்படுத்தும் மெத்தை மிகவும் மோசமான நிலையில் இருப்பதை கண்ட அவர், இன்னும் கோபத்திற்கு ஆளானார்.
ஆத்திரமடைந்த அமைச்சர் படுக்கையின் நிலை குறித்து கேள்வி எழுப்பியவாறு, பாபா ஃபரித் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் ராஜ் பகதூரை அந்த மெத்தையில் படுக்க உத்தரவிட்டார். அதனை ஏற்று அவரும் அதில் படுத்து, மெத்தையின் நிலையை உணர்ந்தார்.
அமைச்சரின் இந்த செயலை அங்கிருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்தனர். அந்த வீடியோவில், “எல்லாம் உங்கள் கையில், எல்லாம் உங்கள் கையில்” என்று அமைச்சர் ஜூரமஜ்ரா படுக்கையில் இருந்து எழுந்தவுடன் மருத்துவரிடம் சொல்வது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
அமைச்சர் சேத்தன் சிங்கின் இந்த செயலுக்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அதாவது, அரசு மருத்துவமனையின் நிலையை கண்டு அமைச்சர் இந்த கோபம் அடைந்தது நியாயமாக இருந்தாலும் கூட, துணைவேந்தரை இப்படி அவமதிக்கலாமா..? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பர்கத் சிங் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஆம் ஆத்மி கட்சியின் மலிவான நாடகங்கள் நிறுத்தப்போவதில்லை. இன்று பாபா ஃபரித் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ராஜ் பகதூர் சிங், சுகாதார அமைச்சர் சேத்தன் சிங் ஜூரமஜ்ராவால் (+2 பாஸ்) பகிரங்கமாக அவமானப்படுத்தப்பட்டார். இந்த வகையான கும்பல் நடத்தை நமது மருத்துவ ஊழியர்களின் மன உறுதியைக் குலைக்கும்,” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதம், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், ஊழல் குற்றச்சாட்டில் தனது அப்போதைய சுகாதார அமைச்சர் விஜய் சிங்லாவை அமைச்சரவையில் இருந்து நீக்கியது குறிப்பிடத்தக்கது.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.