ஆக்சிஜன் முகக் கவசத்துடன் சோனியா காந்தி இருக்கும் புகைப்படத்தை ராகுல் காந்தி வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெங்களூரூவில் எதிர்கட்சிகளின் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு டெல்லி நோக்கி சென்ற இண்டிகோ விமானத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் நேற்றிரவு புறப்பட்டு சென்றனர். அந்த விமானம் வழியில் போபால் நகரில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது என முதலில் தகவல் வெளிவந்தது. பின்னர், இது முன்னுரிமைக்கான தரையிறக்கம் என்றும், மருத்துவ அவசரகாலத்தின் போது மேற்கொள்ளக்கூடியது என்று விமானத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் பச்சோரி உள்ளிட்டோர் உடனடியாக விமான நிலையத்திற்கு சென்று அவர்களை சந்தித்தனர். பின்னர், அவர்களின் உடல்நலம் பற்றியும் கேட்டறிந்தனர்.
இந்த நிலையில், சோனியா காந்தி ஆக்சிஜன் முக கவசம் ஒன்றை அணிந்தபடி இருக்கும் புகைப்படத்தை ராகுல் காந்தி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். அதில், கருணையின் வடிவம் அழுத்தத்தின் கீழ் உள்ளது தாயே என்று குறிப்பிட்டிருந்தார். அவரது இந்தப் பதிவு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.