இந்தியா

அன்ரிசர்வ் டிக்கெட்டில் ஏசி பயணம்.. இளைஞரைக் கொன்ற ரயில்வே ஊழியர்!

பொதுப் பெட்டிக்கான டிக்கெட்டில் ஏசி கோச்சில் பயணம் செய்த காஞ்சிபுரம் இளைஞரை ரயில்வே ஊழியர் கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவனந்தபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரவணன் கோபி. 25 வயதாகும் இவர், கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள தனது உறவினரைப் பார்ப்பதற்காக ரயில் பயணத்திற்கு திட்டமிட்டுள்ளார். இதன்படி, கடந்த அக்டோபர் 12ஆம் தேதி மங்களூரு-கொச்சுவேலி சிறப்பு ரயிலில் பொதுப் பெட்டியில் (Unreserved) பயணம் செய்வதற்கான டிக்கெட் பெற்றுள்ளார்.

ஆனால், அவர் பொதுப்பெட்டியில் பயணம் செய்யாமல், குளிர்சாதன வசதி கொண்ட பெட்டியில் உள்ள படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்துள்ளார். இந்த நிலையில், ரயில்வேயில் தனியார் ஏஜென்சி ஊழியராக பணிபுரிந்து வரும் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனில் குமார் என்பவர் வழக்கமான டிக்கெட் பரிசோதனையில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, அவர் ஏ.சி. பெட்டியில் உள்ள பயணிகளுக்கு தலையணை, போர்வை வழங்கி கொண்டிருந்தார். அந்த நேரத்தில், அவர் பொது டிக்கெட் வைத்துக் கொண்டு ஏ.சி. பெட்டியில் பயணித்த சரவணன் கோபியை கீழே இறங்குமாறு கூறியுள்ளார். ஆனால், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

பின்னர் நள்ளிரவு 11.15 மணியளவில் கோழிக்கோடு ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் செல்லும்போது, ஓடும் ரயிலில் இருந்து சரவணன் கோபியை அனில் குமார் கீழே தள்ளி விட்டுள்ளார். இதில் சரவணன் கோபி நடைபாதையில் விழாமல், நடைபாதையை ஒட்டி உள்ள தண்டவாளத்தில் விழுந்துள்ளார். அப்போது, கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் மீது ரயில் சக்கரம் ஏறி இறங்கியுள்ளது. இதைப் பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உடனே ரயில் பயணிகள் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தி உள்ளனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே பாதுகாப்பு போலீசார், சரவணன் கோபியின் உடலை மீட்டு கோழிக்கோடு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதையும் படிங்க: 3வது மாடியில் இருந்து குதித்து மாணவன் தற்கொலை.. தனியார் கல்லூரியில் அதிர்ச்சி!

பின்னர், இதுதொடர்பாக பெண் பயணி ஒருவர் தந்த தகவலின்பேரில், 50 வயதாகும் அனில் குமாரிடம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர், சுரேஷ் கோபியை ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டு கொன்றதை ஒப்புக் கொண்டார். இதனையடுத்து, அனில் குமார் என்ற ஏஜென்சி ஊழியரை கைது செய்த ரயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hariharasudhan R

Share
Published by
Hariharasudhan R

Recent Posts

விஜய் பாஜகவோட C team? தவெக குறித்து ஓபனாக போட்டுடைத்த பிரபலம்!

தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…

2 hours ago

ஒரு செங்கலைக் கூட இன்னும் எடுத்து வைக்கவில்லை.. திமுக பாணியை கையில் எடுத்த அண்ணாமலை!

மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…

2 hours ago

சந்தானம் போட்ட கண்டிஷனால் கடுப்பான சிம்பு? STR 49 படம் கைமாறியதற்கு காரணம் இதுதானா?

STR 49  “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…

3 hours ago

தனிமனிதனை வேட்டையாடுவதால் வரலாறை மாற்ற முடியாது : கீழடி அமர்நாத் மாற்றம்.. சு.வெங்கடேசன் கண்டனம்!

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…

3 hours ago

கொரேனா பரவல்.. தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கா? உண்மை இதுதான்!

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…

3 hours ago

தக் லைஃப் தோல்வியால் சிம்புவுக்கு வந்த பிரச்சினை? கடைசில இப்படி ஆகிடுச்சே!

சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…

4 hours ago

This website uses cookies.