தெலுங்கானா மாநிலம் கோரண்ட்லாவில் ஏடிஎம் கொள்ளையர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த போலீசார்.
தெலுங்கானா மாநிலம் ஜெகத்தியாலா மாவட்டம் கோரண்ட்லாவில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் ஏடிஎம் மையம் உள்ளது. இன்று அதிகாலை ஏடிஎம் மையத்தின் கதவை திறந்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் நான்கு பேர் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து அதிலிருந்த 19 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை பைகளில் நிரப்பி எடுத்து கொண்டு வெளியில் சென்றனர்.
ஏடிஎம் மையத்திற்குள் கொள்ளையர்கள் புகுந்து இருப்பதை பார்த்த சிலர் அதே நேரத்தில் போலீசாருக்கு தகவல் அளித்தனர். பணத்துடன் கொள்ளையர்கள் நான்கு பேர் வெளியில் வந்து கொண்டிருந்த அதே நேரத்தில் போலீசார் அங்கு வந்து சேர்ந்தனர்.
ஏடிஎம் கொள்ளையர்களை பார்த்தவுடன் போலீசார் அவர்களை விரட்டி சென்றனர். அப்போது கொள்ளையர்கள் பணப்பையை வீசிவிட்டு தப்பி ஓட்டம் பிடித்தனர்.
இதனால் பையில் இருந்த பணம் சாலையில் சிதறி காற்றில் பறக்க துவங்கியது. கொள்ளையர்கள் நான்கு பேரையும் மடக்கி பிடித்த போலீசார் சாலையில் சிதறி காற்றில் பறந்த பணம் முழுவதையும் பொறுக்கி சேர்த்து கைப்பற்றி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளனர்.
சினிமா பாணியில் நடைபெற்ற போலீசாரின் அதிரடி நடவடிக்கை தற்போது பேசு பொருளாக மாறி உள்ளது. விரைந்து செயல்பட்டு கொள்ளையர்களை அதிரடியாக கைது செய்த போலீசாரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.