அரசு வேலை போய்விடும் என்ற அச்சத்தில் அரசு ஒப்பந்த ஊழியர் தனது பெண் குழந்தையை கால்வாயில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானில் அரசு துறையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வரும் ஜவஹர்லால் மேக்வால் (36). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், அவரது மனைவி 3வது முறையாக கர்ப்பமடைந்தார். அண்மையில் அவர்களுக்கு 3வதாக குழந்தை பிறந்துள்ளது.
ராஜஸ்தானில் மூன்றாவது குழந்தை பிறந்தவுடன் அரசு ஊழியர்கள் கட்டாய ஓய்வு பாலிசி அந்த மாநிலத்தில் உள்ளது. இதன்மூலம், மாநில அரசின் இரண்டு குழந்தைகள் திட்டத்தால் நிரந்தர வேலை பறிபோய் விடுமோ..? என்ற அச்சம் மேக்வாலுக்கு எழுந்துள்ளது.
மூன்றாவது குழந்தையால் தனது வேலையில் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, அவரும், அவரது மனைவியும், ஐந்து மாத பெண் குழந்தையை கால்வாயில் வீசி உள்ளனர்.
இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார், தங்கள் மகளைக் கொன்ற வழக்கில் தம்பதியர் நேற்று கைது செய்துள்ளனர்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.