நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இண்டியா கூட்டணியில் இடம்பெற்றிருந்த மற்றொரு கட்சி வெளியேறியது அக்கூட்டணியிரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை எதிர்த்து எதிர்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து இண்டியா கூட்டணியை உருவாக்கியுள்ளன.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் இண்டியா கூட்டணியில் இருந்து விலகினர். மேலும், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் இண்டிய கூட்டணியில் இருந்து வெளியேறி, பாஜக ஆதரவுடன் மீண்டும் ஆட்சியமைத்துள்ளார்.
இந்த நிலையில், உத்தரபிரதேசத்தைச் ச்ந்த ராஷ்டிரிய லோக் தளம் கட்சி இண்டியா கூட்டணியில் இருந்து வெளியேறியது. அக்கட்சியின் தலைவர் ஜெயந்த் சவுதிரியின் தாத்தாவும், முன்னாள் பிரதமருமான சரண் சிங்கிற்கு மத்திய அரசு பாரத ரத்னா விருதை அறிவித்த நிலையில், அவர் இண்டியா கூட்டணியில் இருந்து விலகி, பாஜக கூட்டணியில் இணைந்துள்ளார். இது இண்டியா கூட்டணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.