இந்தியா

கழுகுகளுக்கு இரையாகிறதா ரத்தன் டாடா உடல்? ஆச்சரியமூட்டும் பார்சி கலாச்சாரம்!

மும்பையில் நேற்று காலமான ரத்தன் டாடாவின் பார்சி கலாச்சாரப்படி, அவரது உடல் கழுகுகளுக்கு இரையாக மாறுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மும்பை: இந்தியாவின் முன்னணி உற்பத்தி தொழிலதிபர்களில் ஒருவரான ரத்தன் டாடா நேற்று காலமானார். வயோதிக சாதாரண பரிசோதனைகளுக்காக மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று மாலை திடீரென அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து, அவர் நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், தொழில்முனைவோர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், அவரது உடல், ரத்தன் டாடா சார்ந்த பார்சி கலாச்சார முறைப்படி இறுதி மரியாதை செலுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியானது. முன்னதாக, அவரது உடல் அரசு மரியாதை உடன் அவர் சார்ந்த குடும்ப வழக்கப்படி நல்லடக்கம் செய்யப்படும் என மகாராஷ்டிரா அரசு அறிவித்தது. இந்த நிலையில், ரத்தன் டாடாவின் உடலுக்கு பார்சி வழக்கப்படி, பார்சி சமூக ஆன்மீக குருக்களால் முறைப்படி இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டது.

முக்கியமாக, கி.பி.6ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு தோன்றிய பார்சி சமூகம் பழைய பெர்சியாவில் இருந்ததாக வரலாற்றுச் சான்றுகள் தெரிவிக்கின்றன. பின்னர், இந்தியாவிற்குள் நுழைந்த அச்சமூகம், தற்போது நாட்டில் சிறுபான்மையினமாக கருதப்படுகிறது. மேலும், இந்தியாவில் மிக கணிசமான எண்ணிக்கையிலே பார்சி சமூக மக்கள் வாழ்ந்து வந்தாலும், அவர்களது சமூக பங்களிப்பு முக்கியமாக பார்க்கப்படுகிறது.

மேலும், பார்சி சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் இறந்தால், அவரது உடல் இந்து, இஸ்லாம் முறைப்படி எரிக்கவோ அல்லது புதைக்கவோ செய்யப்படாது. மாறாக, அவர்களது இறந்த உடல் அதற்காகவே கட்டப்பட்டிருக்கும் ஒரு கட்டடத்தின் உச்சியில் வைக்கப்பட்டு பறவைகளுக்கு இரையாகிறது. முக்கியமாக, கழுகுகளுக்கு உடல்கள் உணவாக மாறுகிறது. காரணம், பார்சி சமூக மக்களின் நம்பிக்கைபடி, மனிதன் இயற்கை கொடுத்த வரம், எனவே அவனை இயற்கையிடமே மீண்டும் ஒப்படைத்து விட வேண்டும் என சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: ரத்தன் டாடாவுக்கு அடுத்தது யார்? காத்திருக்கும் வாரிசுகள்!

இதனால் தான் அவர்களது உடல் கழுகுகளுக்கு இரையாக்கப்படுகிறது. ஆனால், மாறி வரும் காலச்சூழலால் பார்சி சமூக மக்களின் இறந்த உடல்கள் மின்மயானங்கள் உள்ளிட்டவைகளில் இறுதிச் சடங்கு செய்யப்படுகிறது.

Hariharasudhan R

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

23 hours ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

24 hours ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

24 hours ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

1 day ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

1 day ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

1 day ago

This website uses cookies.