இந்தியா

சுப்பையா முதல் ஷாந்தனு வரை.. நாயுக்கும் சொத்து.. உயில் எழுதிவைத்த ரத்தன் டாடா!

தனது சமையல்காரர் முதல் செல்லப்பிராணி வரை அனைவருக்கும் உயில் எழுதி வைத்துள்ளார் மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா.

மும்பை: இந்தியாவின் மிக முக்கிய தொழிலதிபர்களில் ஒருவரான ரத்தன் டாடா, கடந்த அக்டோபர் 9ஆம் தேதி வயோதிகம் மற்றும் சில வழக்கமான பரிசோதனைகளுக்காக மும்பையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால், அன்றிரவு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனையடுத்து, அவரது உடல் ரத்தன் டாடா சார்ந்த பார்சி சமூக முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், அவருடைய இளம் நண்பர் ஷாந்தனு நாயுடு முதல் வீட்டுப் பணியாளர் வரை அனைவருக்கும் கோடிக்கணக்கில் உயில் எழுதி வைத்துவிட்டுச் சென்றிருக்கிறார் ரத்தன் டாடா.

முன்னதாக, அவர் கொலாபாவில் வசித்து வந்த வீடு 10 ஆயிரம் கோடி மதிப்புடையது. இது தவிர மும்பை ஜூகுதாரா சாலையில் இருக்கும் இரண்டு மாடிகள் கொண்ட வீடு, அலிபாக்கில் 2,000 சதுர அடி கொண்ட பீச் பங்களா, ரூ.350 கோடி வங்கி டெபாசிட்கள் மற்றும் டாடா சன்ஸ் நிறுவனத்தில் 0.83 சதவீத பங்குகள் என ரத்தன் டாடா பெயரில் பல்வேறு சொத்துக்கள் இருக்கிறது.

இதையும் படிங்க: ரத்தன் டாடாவின் நாய் இறந்துவிட்டதா? உண்மை என்ன?

இந்த நிலையில், தனது வளர்ப்பு நாய்களில் ஒன்றான ஜெர்மன் ஷெபர்டு வகையைச் சேர்ந்த ‘டிட்டோ’ என்ற நாயை வாழ்நாள் முழுவதும் பராமரிக்க உயிலில் சொத்து எழுதி வைத்திருக்கிறார். மேலும், ரத்தன் டாடாவிற்கு கடைசி வரை சமையல்காரராக இருந்த ராஜன் ஷா மற்றும் ரத்தன் டாடாவிற்கு சேவை செய்து வந்த பணியாளர் சுப்பையா ஆகியோருக்கும் தனது உயிலில் சொத்து எழுதி உள்ளார்.

இவர்களில் சுப்பையாவிற்கும், ரத்தன் டாடாவிற்கும் இடையே 30 ஆண்டு கால பந்தம் இருந்தது. ரத்தன் டாடா வெளிநாடுகளுக்குச் சென்றால் சுப்பையாவிற்கு உடைகள் வாங்கி வந்து கொடுப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

Hariharasudhan R

Recent Posts

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

1 day ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

1 day ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

1 day ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

1 day ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

1 day ago

இணையத்தில் டைட்டில் கசிந்ததால் படத்தின் பெயரையே மாற்றிய சூர்யா 45 இயக்குனர்? அடடா…

சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

1 day ago

This website uses cookies.