சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து செம்மரங்களை வெட்டி சிலர் கடத்துவதாக சித்தூர் எஸ் பி ரிஷாந்த் ரெட்டிக்கு இன்று அதிகாலை ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் அடிப்படையில் சித்தூர் மாவட்டத்தில் உள்ள பூத்தலப்பட்டு, குடிப்பாலா ஆகிய காவல் நிலைய போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.
சித்தூர்- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் எம் சி ஆர் கிராஸ் அருகே பூத்தலபட்டு போலீசார் வாகன சோதனை நடத்திய போது அந்த வழியாக செம்மரங்களை கடத்தி வந்த இரண்டு கார்களை மடக்கி அவற்றில் இருந்து எட்டு செம்மரக்கட்டைகளை கைப்பற்றி தமிழ்நாட்டின் வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த எட்டு பேர் உட்பட சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த மூன்று பேரையும் கைது செய்தனர்.
எஸ்பி உத்தரவின் பேரில் சித்தூர்-கடப்பா நெடுஞ்சாலையில் வாகன சோதனை மேற்கொண்ட குடிபாலா போலீசார் அந்த வழியாக செம்மரங்களை கடத்திச் சென்ற இரண்டு கார்களை கைப்பற்றி அவற்றில் இருந்த நான்கு செம்மரக்கட்டைகளை கைப்பற்றி வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ஐந்து பேரை பிடித்து கைது செய்தனர்.
நான்கு கார்கள், 12 செம்மரக்கட்டைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் 16 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர்கள் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு செம்மரக்கட்டைகளை கடத்தி செல்வது தெரியவந்தது. கைப்பற்றப்பட்ட செம்மரக்கட்டைகளின் மதிப்பு 40 லட்ச ரூபாய் என்று போலீசார் தெரிவித்தனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.