ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள நகரி சட்டமன்ற உறுப்பினர் ரோஜா இன்று அமராவதி சமீபத்திலுள்ள வெலகபுடியில் ஆந்திர அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
கடந்த சில நாட்களுக்கு முன் ஒட்டுமொத்த ஆந்திர அமைச்சர்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இந்நிலையில் ஏற்கனவே அமைச்சர்களாக இருந்த 11 பேர் உட்பட 25 பேர் கொண்ட புதிய அமைச்சரவை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நேற்று அறிவித்தார்.
புதிய அமைச்சரவையில் நகரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் நடிகை ரோஜாவும் இடம்பிடித்துள்ளார். இந்தநிலையில் அமைச்சர்களுக்கு இன்று வெலகபுடியில் ஆந்திர ஆளுநர் பிஸ்வா பூசன் ஹரிசந்தன் பதவி பிரமாணம் செய்துவைத்தார்.
நடிகை ரோஜா அமைச்சராக பதவியேற்ற பின் முதல்வர் ஜெகன்மோகன் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார். பின்னர் ஜெகன் மோகன் கைகளை பிடித்து முத்தமழை பொழிந்தார். நடிகை ரோஜா அமைச்சராக பதவியேற்ற போது தொண்டர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கோஷம் அரங்கத்தையே அதிர வைத்தது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.