கேரள மாநிலம் மலப்புறத்தில் குண்டும், குழியுமாக காணப்பட்ட சாலையின் நடுவே தேங்கி கிடந்த மழை நீரில் குளித்து, துவைத்து, தவம் செய்து தனது எதிர்ப்பை தெரிவித்த இளைஞரின் வீடியோ வைரல் ஆகி வருகிறது.
கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்தில் இருந்து பாலக்காடு செல்லும் பிரதான சாலை பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாக காணப்பட்டுள்ளது. சம்ந்தப்பட்ட அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார்.
எனவே இதற்கு எதிர்ப்பு தெருவிக்கும் வகையில் இளைஞர் ஒருவர் புதுவிதமான போராட்டம் ஒன்றை மேற்கொண்டார். பாண்டிக்காடு பகுதியில் சாலையின் நடுவே உள்ள குழியில் தேங்கி கிடந்த மழைநீரில், அதே பகுதியை சார்ந்த கம்சா என்ற இளைஞர் பக்கெட், சோப், மக் உடன் வந்து, தேங்கி கிடந்த நீரில் துணிகளை துவைத்தும், குளித்தும், நீரில் நின்று தவம் செய்யவும் துவங்கியுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அப்பகுதி சட்டமன்ற உறுப்பினர் லதீப் என்பவர், சாலை உடனடியாக சரி செய்யப்படும் என உறுதி அளித்த பின்பு அந்தப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சாலை நடுவே தேங்கிய மழை நீரில் விநோதமான முறையில் கவனத்தை ஈர்க்கும் விதமாக நூதன போராட்டத்தை நடத்திய இளைஞரின் செயல் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகின்றன.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.