கடந்த சட்டமன்ற தேர்தலில் நடிகர் பவன் கல்யாண் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட தொழில் அதிபர் வீடு மீது ஆளும் கட்சியினர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சித்தூர் மாவட்டம் புங்கனூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக கடந்த தேர்தலின் போது நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி வேட்பாளராக தொழிலதிபர் ராமச்சந்திர யாதவ் போட்டியிட்டார். அப்போது முதல் எதிர்க்கட்சியை சேர்ந்த பிரமுகர் என்ற வகையில் தன்னுடைய கட்சி சார்பில் அவர் அரசியல் நடத்தி வந்தார்.
இதனால் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினருக்கும், அவருக்கும் இடையே அரசியலுக்கு அப்பாற்பட்டு பிரச்சனைகள் ஏற்பட்டு வந்தன.
இந்த நிலையில், நேற்று இரவு அவருடைய வீட்டுக்கு வந்த ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த கார்களின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர்.
மேலும், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள், ஜன்னல் கண்ணாடிகள் ஆகியவற்றையும் அடித்து நொறுக்கினர்.
இது பற்றிய தகவல் அறிந்து அங்கு வந்து சேர்ந்த புங்கனூர் போலீசார் வன்முறையில் ஈடுபட்ட ஆளுங்கட்சி தொண்டர்களை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். இந்த சம்பவம் காரணமாக புங்கனூரில் பதட்டம் நிலவுகிறது. எனவே, புங்கனூரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.