சபரிமலையில் புதிய கட்டுப்பாடு… முன்பதிவை நிறுத்த தேவசம் போர்டு எடுத்த முடிவு : பக்தர்கள் ஷாக்!!

சபரிமலையில் புதிய கட்டுப்பாடு… முன்பதிவை நிறுத்த தேவசம் போர்டு எத்த முடிவு : பக்தர்கள் ஷாக்!!

சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்காக கடந்த நவமபர் 16-ஆம் தேதி மாலை நடை திறக்கப்பட்டு, அடுத்த நாளான நவம்பர் 17 கார்த்திகை 1-ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

அன்றிலிருந்து சரியாக 41 நாள் கழித்து கடந்த டிசம்பர் 27, மார்கழி மாதம் 11ஆம் தேதி அன்று மண்டல பூஜைவிழா கோலாகலமாக நடைபெற்றது. மண்டல பூஜை முடிந்து அன்று இரவு 11 மணியளவில் கோவில் நடை சாத்தப்பட்டது.
மீண்டும் சபரிமலை ஐயப்பன் கோயில் நடையானது டிசம்பர் 30 திறக்கப்பட்டது.

இந்நிலையில், சபரிமலையில் பக்தர்களுக்கு சுமுகமான மற்றும் பாதுகாப்பான தரிசன வசதியை ஏற்படுத்த வரும் 10-ம் தேதி முதல் ஸ்பாட் புக்கிங் செய்து தரிசனம் செய்யும் முறை நிறுத்தப்படுகிறது என திருவிதாங்கூர் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. வரும் 14-ஆம் தேதி முன்பதிவு வரம்பு 50,000 பேர் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் எனவும் மகரவிளக்கு தினமான ஜனவரி 15-ம் தேதி சபரிமலை ஐயப்ப சுவாமி தரிசனத்திற்கு 40,000 பேர் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலைக்கு வரும் 14-ம் மற்றும் 15-ம் தேதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் அந்த நாட்களில் குழந்தைகள் சபரிமலைக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என தேவசம் போர்டு தலைவர் பி.எஸ். பிரசாந்த் கூறியுள்ளார். வழக்கமாக மகரவிளக்குக்கு மூன்று நாட்களுக்கு முன் வரும் ஐயப்ப பக்தர்கள், மகரவிளக்கு மற்றும் திருவாபரனை தரிசனம் செய்ய சன்னிதானம் செல்லாமல் சபரிமலையில் பல்வேறு இடங்களில் முகாமிட்டு வருகின்றனர்.

மீண்டும் ஐயப்ப தரிசனத்திற்காக அதிக பக்தர்கள் மலை ஏறினால், பாதுகாப்பு மற்றும் சுமூக தரிசன வசதி பாதிக்கும். இதனால், சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு பாதுகாப்பான தரிசனம் அளிக்கும் வகையில் ஸ்பாட் புக்கிங்கை தவிர்க்க திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பி.எஸ். பிரசாந்த் தெரிவித்தார். 16-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை அதிக பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவுள்ளனர். இந்த வசதியை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார். சபரிமலை தரிசனத்திற்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு முன்பதிவு கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

1 day ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

2 days ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

2 days ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

2 days ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

2 days ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

2 days ago

This website uses cookies.