சபரிமலையில் புதிய கட்டுப்பாடு… முன்பதிவை நிறுத்த தேவசம் போர்டு எடுத்த முடிவு : பக்தர்கள் ஷாக்!!

சபரிமலையில் புதிய கட்டுப்பாடு… முன்பதிவை நிறுத்த தேவசம் போர்டு எத்த முடிவு : பக்தர்கள் ஷாக்!!

சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்காக கடந்த நவமபர் 16-ஆம் தேதி மாலை நடை திறக்கப்பட்டு, அடுத்த நாளான நவம்பர் 17 கார்த்திகை 1-ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

அன்றிலிருந்து சரியாக 41 நாள் கழித்து கடந்த டிசம்பர் 27, மார்கழி மாதம் 11ஆம் தேதி அன்று மண்டல பூஜைவிழா கோலாகலமாக நடைபெற்றது. மண்டல பூஜை முடிந்து அன்று இரவு 11 மணியளவில் கோவில் நடை சாத்தப்பட்டது.
மீண்டும் சபரிமலை ஐயப்பன் கோயில் நடையானது டிசம்பர் 30 திறக்கப்பட்டது.

இந்நிலையில், சபரிமலையில் பக்தர்களுக்கு சுமுகமான மற்றும் பாதுகாப்பான தரிசன வசதியை ஏற்படுத்த வரும் 10-ம் தேதி முதல் ஸ்பாட் புக்கிங் செய்து தரிசனம் செய்யும் முறை நிறுத்தப்படுகிறது என திருவிதாங்கூர் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. வரும் 14-ஆம் தேதி முன்பதிவு வரம்பு 50,000 பேர் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் எனவும் மகரவிளக்கு தினமான ஜனவரி 15-ம் தேதி சபரிமலை ஐயப்ப சுவாமி தரிசனத்திற்கு 40,000 பேர் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலைக்கு வரும் 14-ம் மற்றும் 15-ம் தேதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் அந்த நாட்களில் குழந்தைகள் சபரிமலைக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என தேவசம் போர்டு தலைவர் பி.எஸ். பிரசாந்த் கூறியுள்ளார். வழக்கமாக மகரவிளக்குக்கு மூன்று நாட்களுக்கு முன் வரும் ஐயப்ப பக்தர்கள், மகரவிளக்கு மற்றும் திருவாபரனை தரிசனம் செய்ய சன்னிதானம் செல்லாமல் சபரிமலையில் பல்வேறு இடங்களில் முகாமிட்டு வருகின்றனர்.

மீண்டும் ஐயப்ப தரிசனத்திற்காக அதிக பக்தர்கள் மலை ஏறினால், பாதுகாப்பு மற்றும் சுமூக தரிசன வசதி பாதிக்கும். இதனால், சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு பாதுகாப்பான தரிசனம் அளிக்கும் வகையில் ஸ்பாட் புக்கிங்கை தவிர்க்க திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பி.எஸ். பிரசாந்த் தெரிவித்தார். 16-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை அதிக பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவுள்ளனர். இந்த வசதியை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார். சபரிமலை தரிசனத்திற்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு முன்பதிவு கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.