ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கார்த்திகை மாதம் மாலை அணிந்து, விரதம் இருந்து கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்பனை தரிசிப்பது வழக்கம். தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.
இந்த நிலையில், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான பொன்னம்பலம்மேட்டில் அமர்ந்து சிலர் விஷேச பூஜைகளை செய்த வீடியோ சமூகவலைதளங்கில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பந்தல ராஜாவின் ஆபரணங்கள் எடுத்து வரப்பட்டு, ஐயப்பனுக்கு அதனை சாட்டி வழிபடும் போது, பொன்னம்பல மேட்டில் ஜோதியாக ஐயப்பன் காட்சி தருவார் என்பது இந்தக் கோவிலின் ஐதீகம். அப்படிபட்ட பொன்னம்பல மேட்டிற்கு கோவில் பூசாரிகளை தவிர்த்து, வேறு யாரும் எல்ல அனுமதி கிடையாது. அதோடு, வனவிலங்குகள் அதிகம் உள்ள இப்பகுதிக்கு, சாதாரண மக்கள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.
இப்படியிருக்கையில், பொன்னம்பலம்மேட்டில் அமர்ந்து சிலர் விஷேச பூஜைகளை செய்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஐயப்பன் கோவிலின் சம்பிரதாயங்களையும், மரபுகளையும் மீறிய செயல் என்றும், சம்பந்தப்பட்ட நபர்களை கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐயப்ப பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே, இந்தப் பூஜை நடக்கும் வீடியோ வைரலான நிலையில், அதில் இருந்த 5 பேரும் தமிழில் பேசிக் கொண்டிருப்பதால், தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…
புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…
மனம் கவர்ந்த பாடகி பாலிவுட்டில் “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் மூலம் சினிமாவிற்குள் பின்னணி பாடகியாக அடியெடுத்து…
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திராசு கிராமத்தில் 80 வயது மூதாட்டி இயற்கை உபாதை கழிக்க அருகில் உள்ள…
This website uses cookies.