ஆந்திரா : மேற்கு கோதாவரி மாவட்டம் தாடே பள்ளி பகுதியில் சீனியர் மாணவர்கள் ஜூனியர் மாணவரை அடித்து உதைத்து ராகிங் செய்த நிலையில் 9 மாணவர்களை போலிசார் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த ஜெய கிரண் மேற்கு கோதாவரி மாவட்டம் தாடே பள்ளி தனியார் கல்லூரியில் மெக்கானிக்கல் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று சீனியர் மாணவர்கள் ஜெயகிரணை, அவர்களுடைய விடுதி அறைக்கு வருமாறு அழைத்துள்ளனர். இதற்கு ஜெய கிரன் மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து மிரட்டி விடுதி அறைக்கு வரவழைத்து ஜெய கிரணை முட்டி போட வைத்து அடித்தும் காலால் உதைத்தும் ராகிங் செய்துள்ளனர்.
இதனால் காயமடைந்த ஜெய கிரண் இதுகுறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் 9 சீனியர் மாணவர்களை கைது செய்தனர். தொடர்ந்து ராகிங்கில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென மற்ற மாணவர்களை எச்சரித்தனர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.