ஆந்திரா : மேற்கு கோதாவரி மாவட்டம் தாடே பள்ளி பகுதியில் சீனியர் மாணவர்கள் ஜூனியர் மாணவரை அடித்து உதைத்து ராகிங் செய்த நிலையில் 9 மாணவர்களை போலிசார் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த ஜெய கிரண் மேற்கு கோதாவரி மாவட்டம் தாடே பள்ளி தனியார் கல்லூரியில் மெக்கானிக்கல் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று சீனியர் மாணவர்கள் ஜெயகிரணை, அவர்களுடைய விடுதி அறைக்கு வருமாறு அழைத்துள்ளனர். இதற்கு ஜெய கிரன் மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து மிரட்டி விடுதி அறைக்கு வரவழைத்து ஜெய கிரணை முட்டி போட வைத்து அடித்தும் காலால் உதைத்தும் ராகிங் செய்துள்ளனர்.
இதனால் காயமடைந்த ஜெய கிரண் இதுகுறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் 9 சீனியர் மாணவர்களை கைது செய்தனர். தொடர்ந்து ராகிங்கில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென மற்ற மாணவர்களை எச்சரித்தனர்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.