கேரள மாநிலம் கொச்சியில், வெளி மாநில தொழிலாளர்கள் வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்பில், பீஹாரைச் சேர்ந்த தொழிலாளி, மனைவி மற்றும் 5 வயது மகளுடன் வசித்து வந்தார்.
கடந்த ஜூலை 28 ல் பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த அஸ்பக் ஆலம் என்பவன், ஜூஸ் வாங்கி தருவதாகக் கூறி, சிறுமியை அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்த பிறகு கொலை செய்தான்.
சிறுமி உடல், கோணிப்பையில் அடைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இச்சம்பவம் கேரளாவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
குற்றவாளி அஸ்பக் ஆலம் மீது பலாத்காரம், கடத்தல், கொலை, ஆதாரங்களை அழித்தல் உள்ளிட்ட 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவன் மீதான வழக்கு எர்ணாகுளம் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி கே. சோமன், அஷ்பாக் ஆலமுக்கு தூக்கு தண்டனையும், 5 ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கினார். சம்பவம் நடந்து 109 நாட்களில் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.