அசாம் மாநிலம் கவுகாத்தியில், அசாம் உள்துறை மற்றும் அரசியல் செயலராக ஷிலாத்யா சேத்யா ஐபிஎஸ் பதவி வகித்து வந்தார். 44 வயதான இவரது மனைவி போர்பருவா, இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். ஷிலாத்யா தனது மனைவியை பல்வேறு இடங்களுக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார். ஆனாலும் அவரது மனைவியின் உடல்நிலையில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படவில்லை. தொடர்ந்து உடல்நிலை மோசமாகவே இருந்துள்ளது. சமீபத்தில் கவுகாத்தியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக icu-வில் அனுமதித்திருந்தபோதும் கூட கடந்த சில நாட்களாக போர்பருவாவின் உடல் மிகவும் மோசமடைந்து வந்துள்ளது. இந்நிலையில், நேற்று மாலை 4.25 மணியளவில் சிகிச்சை பலனின்றி போர்பருவா இறந்திருக்கிறார்.மனைவி இறந்த செய்தி கேட்டதும் மருத்துவமனைக்கு வந்த ஷிலாத்யா, “எனது மனைவிக்கு அஞ்சலி செலுத்தவேண்டும். ஆகையால் எனக்கு தனிமை வேண்டும்” என்று மருத்துவமனை ஊழியர்களிடம் கேட்டுள்ளார். அவர்களும், ICU-வில் இருந்த ஊழியர்கள் வெளியே சென்றுள்ளனர்.அடுத்த சில நிமிடங்களில் உள்ளிருந்து துப்பாக்கி சத்தம் கேட்கவும், ஊழியர்கள் அலறி அடித்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்த போது அங்கு ஷிலாத்யா சேத்யா தனது துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்உள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஷிலாத்யா சேத்யாவுக்கு, போர்பருவாருடன் கடந்த 2013ல் திருமணம் நடந்து தற்போது வரை குழந்தை பிறக்கவில்லை. மேலும் சமீபத்தில் இவர் தாயாரும், இவரது மாமியாரும் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். வேலை பளு, குழந்தையின்மை, மனைவியின் உடல்நிலை, அடுத்தடுத்து நடந்த அசம்பாவிதங்கள் அனைத்தும் ஷிலாத்யாவிற்கு மன உளைச்சலை ஏற்படுத்தி தற்கொலைக்கு காரணமாக இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது.ஷிலாத்யா சேத்யா கிரிமினல் மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக பல நடவடிக்கைகளை மேற்கொண்டவர். அதற்காக 2015ல் குடியரசுத்தலைவரின் கையால் காவல்துறை பதக்கத்தைப் பெற்றவர்.
ஐபிஎஸ் அதிகாரியான இவர் குடியரசுத்தலைவரின் வீரப்பதக்கம் பெற்றிருந்தவர் என்பது குறிப்பித்தக்கது. கடந்த 4 மாதங்களாக மனைவிக்காக அவர் விடுப்பிலேயே இருந்திருக்கிறார் என தெரிகிறது.ஷிலாத்யா சேத்யா கிரிமினல் மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக பல நடவடிக்கைகளை மேற்கொண்டவர். அதற்காக 2015ல் குடியரசுத்தலைவரின் கையால் காவல்துறை பதக்கத்தைப் பெற்றவர். ஐபிஎஸ் அதிகாரியான இவர் குடியரசுத்தலைவரின் வீரப்பதக்கம் பெற்றிருந்தவர் என்பது குறிப்பித்தக்கது. கடந்த 4 மாதங்களாக மனைவிக்காக அவர் விடுப்பிலேயே இருந்திருக்கிறார் என தெரிகிறது. “காக்கிச் சட்டையிலும் இவ்வளவு காதலா?!” என இச்சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது
டாப் நடிகை தென்னிந்தியாவின் டாப் நடிகையாக சமீப காலங்களில் வலம் வருபவர் சமந்தா. கடந்த 2022 ஆம் ஆண்டு தனக்கு…
திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஹரி ஜோதி என்பவரின் இரண்டாவது மகன் அஜய்(22). இவர் நண்பர்களுடன்…
ரேஸர் அஜித்குமார் அஜித்குமார் தற்போது உலக நாடுகள் பலவற்றில் கார் பந்தயங்களில் மிகவும் தீவிரமாக ஈடுபாடு காட்டி வருகிறார். சில…
பீனிக்ஸ் விழான்? விஜய் சேதுபதியின் மகனான சூர்யா சேதுபதி கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் “பீனிக்ஸ்”. இத்திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள…
அஜித் குமார் கொலைக்கு பிறகு தனிப்படையை அரசு கலைத்திருப்பது வரவேற்கத்தக்கது.மடப்புரத்தில் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். இதையும் படியுங்க: திமுக…
விருதுநகர் அருகே உள்ள சின்ன தாதம்பட்டியில் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து 50 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட திருமண…
This website uses cookies.